Tuesday 26 May 2015

குரல் இனிமைக்கு மாந்தளிர்


    மாம்பழம் சார்ந்த உணவுப் பொருட்களை நாம் உட்கொள்வதால் வைட்டமின் A நமக்கு போதுமான அளவு கிடைக்கிறது.



  1. மாந்தளிரை நன்றாகக் காயவைத்து பொடித்துக் கொள்ளுங்கள். தண்ணீரில் இந்தப் பவுடரை மூன்று சிட்டிகை கலந்து குடித்தால், தொண்டை சம்பத்தப்பட்ட எந்த நோயும் நெருங்காது. குரல் வளமும் பெருகும்.
  2. மா இலைச் சாறுடன் அதே அளவு தேன், பால், பசும் நெய் கலந்த சாப்பிட்டால் கட்டிக் குரலும் இனிமையாக மாறும்.
  3. மா இலையைச் சுட்டு தேனில் வதக்கி சாப்பிட்டு வந்தால், தொண்டைக்கட்டு, கரகரப்பு, சளி நீங்கும்.
  4. மா இலையை பொடியாக்கி பற்களில் தேய்த்து வர, பல்லில் உள்ள காரை மறந்து பற்கள் முத்துப்போல் ஜொலிக்கும்.
  5. மாம்பழம் மலமிலக்கியாக செயல்படுவதுடன், முகத்தில் உள்ள பருக்களையும் போக்கும். சூடு உடம்பு உள்ளவர்கள், மாம்பழம் சாப்பிட்டதும் ஒரு டம்ளர் பாலை குடித்தால் சூடு பிடிக்காது.
  6. ஒரு டீஸ்பூன் மாங்கொட்டை பவுடருடன், ஒரு துளி நெய்  கலந்து சாப்பிட்டால் வயிற்றில் பூச்சித் தொல்லை நீங்கும். நகத்தின் மேல் இருக்கும் வெள்ளைப் புள்ளிகள், நக வெட்டு, தோலில் உள்ள வெள்ளை திட்டுக்களும் நீங்கிவிடும்.
  7. மா மரத்தின் பட்டையில் வடியும் பாலை கால் வெடிப்பில் தடவினால், வெடிப்பு மறந்து பாதம் பட்டுப்போல் மின்னும்.
  8. ஒரு சிட்டிகை மா மர பிசினை ஒரு டம்ளர் மாம்பழ ஜூஸுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தேமல், தழும்பு, படை நீங்கி தோல் மிருதுவாகும்.

No comments:

Post a Comment