Saturday 9 March 2024

முதல் வகை சர்க்க்கரை நோய் என்றால் என்ன ?

 

      இந்த நோய் இளமை பருவத்திலேயே வரக்கூடியதாகும். கணையம் என்ற உறுப்பில் எளிதில் பார்க்க முடியாத அளவுக்கு மிக நுண்ணியதாக பல திட்டுகள் உள்ளன. இத்திட்டுகளில் அடங்கியுள்ள செல்களை பீட்டா செல்கள் என்றும் ஆல்பா செல்கள் என்றும் இருவையாக பிரித்துள்ளனர். இச்செல்கள் தூண்டுவதின் மூலம் இன்சுலின் என்ற இயங்கு நீரை சுரக்கின்றது. இந்த இயக்கு நீர்கள் சேமிக்கப்பட்டு இரண்டு நாளங்கள் வழியாக சிறுகுடலில் நுழைந்து உட்புறச் சுவற்றில் உள்ள மெல்லிய மயிரிழை போன்ற விரலிகள் எனப்படுவதில் உள்ள இரத்தத்தில் நேராக கலக்கின்றது. இன்சுலின் கலந்த ரத்தம் இருதயத்துக்குச் சென்று சுருன்குவத்தின் மூலம் நுரையிரளுக்குச் செல்கிறது. நுரையீரலில் சர்க்கரையை சேமிக்கவும், கொழுப்புத் திசுக்களில் கொழுப்பைச் சேமிக்கவும், தசைகளில் புரதம் மற்றும் மாவுச் சத்தை ரத்தத்தில் சேர்க்க செய்கிறது. சேர்ந்தபின் அவ்வாறு கலந்த ரத்தம் மீண்டும் இருதத்திற்கு வந்து இடபக்க கீழறை சுருங்குவதின் மூலம் மகாதமணி வழியாக இச்சத்துகளை இரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் தான் உடலின் பலபாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. பின் மீண்டும் திரும்பும் போது மேலறைகள் விரிகிறது. விரிவடைந்து வலது மேலறைக்கு வந்து, மேலறை சுருங்குவதால் வலது கீழறைக்கு வரப்பெற்று வலது கீழறை சுருங்கும் போது அசுத்த இரத்தம் சிரைகள் வழியாக நுரையீரலுக்கு வந்து சேருகிறது, என்பதை ஏற்கனவே முன்பகுதியில் பார்த்தோம்.


     சுவாசிக்கும் பொது காற்றில் உள்ள பல தோற்று நோய்க்கிருமிகள் உடலினுள்ளே புகுந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலவகை தொற்றுக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால் காய்ச்சல், அம்மை, சளி போன்ற நோய்கள் முதலில் வரும். வேறு சிலவகை தொற்றுகிருமிகள் இரத்தத்தில் வந்த ஓரிரு மாதங்களில் வளர்ந்து காமாலை போன்ற நோயை உண்டாக்குகிறது, இன்னும் சிலவகை தொற்று நோய்க் கிருமிகள் நம் உடலில் பரவி செல்களை தாக்குகின்றன. உடலில் எப்பாகத்தில் அதிக தாக்குதல் உள்ளதோ, அங்குள்ள உறுப்புகளால் செயல்படமுடியவில்லை, வைரஸ் நோய்க்கிருமிகள் செல்களைத் தாக்கும் பொது கணையத் திட்டுகளில் உள்ள பீட்டா செல்களையும் விட்டு வைக்காமல் தாக்குகின்றன. இதனால் பீட்டா செல்கள் செயல்பட முடியாமல், இன்சுலின் என்ற இயக்கு நீரை சுரக்க விடாமல் தடுத்து விடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் பிறவியிலேயே குறையுள்ள செல்களை கொண்டிருப்பதாலும் தொற்று நோய் கிருமிகள் தாக்குதல்களாலும் இன்சுலின் சுரப்பு நிலை அறவே இல்லாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற நிலைகளில் உள்ளவர்களை முதல் நிலை சர்க்கரை நோய்யுள்ளவர்கள் என்று கூறுகிறார்கள்.


Tuesday 11 July 2023

சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்வது

 

      சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நலவாழ்வு முறைக்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.

    வயது வித்தியாசம் இல்லாமல், உணவு முறையில் மாற்றம் ஊட்டச்சத்துணவின் முக்கியத்துவம்,  உடல் திறனை அதிகரிக்கும் செயல்பாடுகள், எடைக் குறைப்பில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் ஈடுபாட்டால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை அறுபது சதவீதம் வரை தடுத்துவிடலாம்.


       வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிட்டு பழக வேண்டும். அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துகொண்டு, மொத்த கலோரியில் முப்பது சதவீதம் குறைவாகச் சாப்பிட்டாலும் பரவாயில்லை. கொழுப்புச் சத்து பத்து கலோரி அளவு மட்டுமே இருக்குமாறு உணவு முறை இருக்க வேண்டும்.

      மாமிச உணவுகளைவிட இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்களில் கொழுப்பு குறைவு, மற்றம் சத்துகள் அதிகம். எனவே, இயற்க்கை உணவுக்குத் திரும்ப வேண்டும்.

 


      தொடர்ந்து உடற்பயிர்ச்சியில் ஈடுபட வேண்டும். நடப்பது நல்லது மோட்டார் சைக்கிளில் செல்வதை விட சைக்கிளில் செல்வது உடல் திறனை அதிகரிக்கும். ஏரோபிக் பயிற்சிகள், இசைக்கு ஏற்ற நடனம் போன்றவற்றில் ஈடுபடலாம். 

      உடல் எடையை அதிகரிக்கவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால், நம்மை நோக்கி சர்க்கரை நோய் வராமல்  தடுத்துவிடலாம்.

      மேலும், முப்பது முதல் நாற்பது வயதாகிவிட்டாலே, ஆண்டுக்கு ஒருமுறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

  1. குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால்.
  2. நீங்கள் அதிக எடையுடன் இருந்தால்.
  3. எவ்வளவு சாபிட்டாலும் காரணமே இல்லாமல் எடை குறைந்தால்.
  4. உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால்.
  5. காரணமே இல்லாமல் அலர்ஜி மலசிக்கல் இருந்தால்.
  6. மன இறுக்கம்.
  7. அதிகப் பசி.
  8. மிகுதியான தாகம்.
  9. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  10. காயங்கள் ஆறாத நிலை. 

 

      போன்றவை இருந்தால், உடனடியாகத் தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி, சிறுநீர்ப் பரிசோதனை அல்லது ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

     உணவு சாப்பிட்டு ஒன்றை மணி முதல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்வது தான் சரியான முறை. முதலில் வெளியாகும் சிறுநீரை கழித்துவிட்டு, இரண்டாவது முறை கழிக்கும் சிறுநீரை ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்துப் பரிசோதிக்க வேண்டும்.

      மருந்துக் கடைகளில் டயஷ்டிக்ஸ் என்ற பெயரிலோ அல்லது டெஸ்ட் டேப் சுகர் இன் யூரின் என்ற பெயரிலோ கிடைக்கும் பரிசோதனை கிட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி, சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

      மருந்துக் கடைகளில் பெனடிக்ட் சொல்யுஷன் என்ற கேட்டு வாங்கி, அதில் ஐந்து மில்லி எடுத்து ஒரு சோதனைக் குழாயில் போட்டு ஸ்பிரிட் விளக்கு வெப்பத்தில் கொதிக்கவையுங்கள். பெனடிக்ட் சொல்யூஷன் நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.

      இரண்டாவது முறையாக எடுத்த சிறுநீரில் இருந்து ஒரு சொட்டு விட்டு மறுபடியும் கொதிக்க வையுங்கள். இப்போது நிறத்தைப் பாருங்கள். நிறம் மாறாமல் நீல நிறத்தில் இருந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் இல்லை. மஞ்சள் நிறத்தில் இருந்தால், இரண்டு சதவீதம் வரை சர்க்கரை நோய் உள்ளது என்பதையும், ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், சர்க்கரை நோய் இருப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளலாம். வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்ட பிறகு சிறுநீர்ப் பரிசோதனை செய்ய வேண்டாம். இதனால், சிறுநீரில் தவறான முடிவுகள் தெரியலாம்.

      ஆண்டுக்கு ஒருமுறை கண், இதயம், பொது உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால், அறுவைசிகிச்சை முன்பும், பின்பும் சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

      உங்கள் கை கால்களில் புண்கள் மற்றும் காயங்கள் ஏற்படாமலும், ஒருவேளை ஏற்பட்டால் அவை விரைந்து ஆருகின்றனவா என்பதையும், அளவுக்கு மீறிய களைப்பு ஏற்படுவதாக இருந்தா, இதயப் பரிசோதனையையும் செய்து கொள்ளுங்கள்.


       திருமணம் செய்துகொள்ளும் முன், மாப்பிள்ளை - பெண் வீட்டார் இருவரும், குடும்பத்துக்குள் சர்க்கரை நோய் ஏதும் இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

Friday 7 July 2023

யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் வரும் ?


     நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  அடிக்கடி வரும் எண்ணம், "உடம்பெல்லாம் அடிக்கடி அசதியாகி விடுகிறது, பாதங்களில் ஒரே எரிச்சல், காலில் காயம் பட்டால் சீக்கிரம் ஆறுவதில்லை, கண்கள் அடிக்கடி இருட்டிக்கொண்டு வருகிறது. எனக்கு சர்க்கரை நோய் இருக்குமோ " என்று தான்.

     சந்தேகமாக இருந்தால், உடனே சர்க்கரை நோயைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை என்றால், அது வரும் வாய்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

      நிறைய இனிப்பு (சர்க்கரை) சாப்பிட்டால் தான் சர்க்கரை நோய் வரும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. புறகு எதை வைத்து எனக்கு சர்க்கரை நோய் வரும் என்பதை அறிந்த்கொள்வது என்கிறீர்களா?

     கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல ஆராய்ச்சிகள் செய்து, என்னென்ன காரணங்களால் சர்க்கரை நோய் வரும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாழ்க்கை முறை மற்றும் உடல் நலப் பாதிப்புகள் தான் சர்க்கரை நோயை உண்டாக்கும் முக்கியக் காரணிகளாகும்.

 



குடும்பப் பின்னணி

      குடும்பத்தில் உங்கள் தந்தைக்கோ, தாய்க்கோ, தம்பி அல்லது தங்கை போன்ற உடன்பிறப்புகளுக்கோ, ஒன்றுவிட்ட சித்தப்பா, சித்தி, மாமா போன்றவர்களுக்கோ சர்க்கரை நோய் இருந்தால், உங்களுக்கும் சர்க்கரை நோய் வரக்கூடிய  வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றோர்கள் இருவருக்கும் இருந்தால், உங்களுக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும் சாத்தியம் அதிகம் உள்ளது.

 



உடல் எடை

      80 சதவீதத்துக்கும் அதிகமான பேர், உடல் எடை கூடுவதால் இந்த நோய்க்கு இலக்காகிறார்கள். அதிகக் கொழுப்பால், செல்கள் விரிவடைந்துவிடுவதால், போதுமான இன்சுலினை செல்கள் பெற முடியாது. உங்கள் எடை ஒவ்வொரு பவுண்டு அதிகரிக்கும் போது, சுமார் நான்கு சதவீத சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை நீங்கள் உண்டாக்கிகொள்கிரீர்கள். இன்சுலின் தனது வேலைகளைச் சரியாக செய்யாத வகையில் செல்களில் கொழுப்பு அடைத்துகொள்ளும்.

 



உடல் செயல்பாடு குறைதல்

    நான் ஹவுஸ்வொய்பாக இருக்கிறேன், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறேன் என்று எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

      சம்பெனியில், கூலிக்கு வேலை பார்ப்பவன் வண்டியில் போகிறான். என் அந்தஸ்துக்கு நான் காரில் தான் போவேன். பத்தடி தூரம் நடப்பது கூட என் அந்தஸ்துக்கு செய்யும் அவமரியாதை என்று நினைப்பவர்களுக்கும், காலாற நடக்காதவர்களுக்கும், எந்த வேலையும் பிறர் மீது திணித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடப்பவர்களுக்கு இன்சுலின் சரியாக வேலை செய்யாமல், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வந்துவிடும்.

 



ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு

      ரத்த அழுத்தம் 140/90-க்கு அதிகமாகவும், கொழுப்பில் டிரைகிளிசரின் அளவு 250மில்லிகிராமுக்கு அதிகமாகவும், எச்.டி.எல் கொழுப்பு 35மில்லிகிராமுக்கு குறைவாகவும் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

 



வயது

       45 வயது ஆகும்போது, உடலின் செயல்திறன் குறைந்து சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். இருபது வயதிலேயே நாற்பது வயது ஆனவரைப்போல் நடந்துகொள்ளும் நபர்களுக்கும் சர்க்கரை நோய் வரும்.

 



பெண்கள்

      பாளிசிஷ்டிக்  ஓவோரியன் சிண்ட்ரோம் என்ற  நார்க்கழைலை பாதிப்பு உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் அதிக எடை கொண்ட குழந்தை பெற்ற பெண்கள், உடல் செயல் திறன் குறைந்த பெண்கள் ஆகியோர் சர்க்கரை நோயை எதிர்பாத்துக் காத்திருக்கலாம்.

 



உடல் பருமன் 

      தைராய்டு பிரச்சனை போன்ற  ஹார்மோன் பாதிப்புகள் மற்றும் உணவு முறை, பரம்பரை போன்றவை காரணமாக உடல் பாரும் அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதகான வாய்ப்புகள் அதிகம். உயரத்துக்கு ஏற்ற உடல் பருமனும் எடையும் இல்லாமல் கூடுதலாக இருந்தால் சர்க்கரை நோய் வரும். தொப்பை பெரியதாக இருப்பவர்கல்லும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு.

Wednesday 21 September 2022

புயல்களுக்கு எப்படி மற்றும் யார் பெயர் வைக்கிறார்கள் தெரியுமா ?


       புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள், எதற்காக வைக்கபடுகிறது, எப்படி வைக்கிறார்கள், யார் வைக்கிறார்கள் என்று தெரியுமா. ஒவ்வொரு ஆண்டிலும், ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் இந்தியாவில் உருவாகுகிறது. அவை உருவான நாள், மாதம், ஆண்டு, இடம் ஆகியவற்றை மட்டும் தெரிவிக்கும் போது பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தான் புயல்களுக்கு பெயர்கள் வைக்கபடுகின்றது. 

 

      வானிலை மற்றும் காலநிலையை ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள், பேரிடர் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இம்முறை உதவியாக உள்ளது. ஒரு புயலை அடையாளம் காணுதல், உருவாகும் விதத்தை அறிவது, எளிதாக நினைவில் கொள்வது, விரைவாக எச்சரிக்ககளை வழங்குவது என பலவற்றிற்கும் இது உதவிகரமாக உள்ளது. 

 

      பொதுவாக வெப்பமண்டல கடல் பகுதிகளில் புயல்கள் அதிகமாக உருவாகுகின்றன. அவற்றின் சீற்றம் அவை உருவாகும் இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. தென்பசுபிக் இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றத்திற்கு புயல் என்றும் வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசுபிக், கிழக்கு வடக்கு பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றம் சூறாவளி என்றும், வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றம் கடும் புயல் என்றும் உலக வானிலையாளர்களால் கூறபடுகிறது.

 


      புயல் மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவரங்கள், தொழில்நுட்பம், வேகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அது எந்த மாதிரியான புயல் என்று குறிபிட்டார்கள். இதை குறிபிடுவதும் ஆவணபடுத்துவம் சிரமமாக இருந்தது. அதன் பின்னர் தான் புயலுக்கு தனித்த பெயரிடும் வழக்கம் தோன்றியது. இவ்வழக்கம் உலக அளவில் பல்லாண்டுக்கு முன்பே தோன்றிவிட்டது. தொடக்கத்தில் பெண்களின் பெயர்களை புயலுக்கு சூட்டினர். அதன் பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆண்கள் பெயர்களும் வைக்கப்பட்டன. 1873 ல் நிறுவப்பட்ட பன்னாட்டு வானிலை அமைப்பு உலக வானிலை அமைப்பு என்ற பெயர் மாற்றத்துடன், சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் 1950 முதல் செயல்பட்டு வருகிறது. 

 

      இதில் உலகின் 187 நாடுகள் மற்றும் 6 பிரதேசங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன், தென்மேற்கு பசுபிக், ஐரோப்பா, ஆகிய ஆறு வானிலை மண்டலங்களை இந்த அமைப்பு ஒருங்கிணைகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உருவாகும் புயல்களுக்கு அப்பகுதி நாடுகள் ஓன்று சேர்ந்து பெயர் வைத்து அதை உலக வானிலை நிறுவனமும், ஆசியா, பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியன அங்கீகாரம் அளித்து பட்டியலை இறுதி செய்கிறது. டெல்லி இந்திய வானிலை ஆராய்ச்சி துறை மண்டல அளவிலான, வானிலை மையங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

 


      1970 ல் ஜெனிவாவில் நடைபற்ற மாநாட்டில் பசுபிக் கடல்களில் உருவாகும் கடல்களுக்கு பெயர் வைக்கும்படி, அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டு கொண்டது. புயலுக்கு பெயரிட சில விதிமுறைகளும், நிபந்தனைகளும் உள்ளன. புயல் பெயர்களில் அரசியல், அரசியல்வாதிகள், கலாச்சாரம், மத நம்பிக்கைகள், இனம் ஆகியவை இருக்க கூடாது. உலக அளவில் வாழும் மக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் படி இருக்க கூடாது. மிக கொடூரமான பெயர் தவிர்க்கப்பட வேண்டும். பெயர் சிறியதாகவும் உச்சரிக்க எளிதாகவும் இருக்க வேண்டும். பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும். அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பெயரிட்ட நாடுகள் குறிபிட வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய பெயரை மீண்டும் பயன்படுத்த முடியாது. 

 

      இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மட்டும் இதுவரை 169 பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. பெயர் புயலுக்கு சூட்டபடும் முன் குழு நாடுகளின் அனுமதி பெற வேண்டும். அதெல்லாம் சரி இந்த பெயர்களை யார் வைக்கிறார்கள் என்று கேட்குறீர்களா. இதுவரை பரிந்துரை செய்யப்பட்டு தேர்வு செய்து சூட்டப்பட்ட பல பெயர்கள் பொது மக்களாக சூட்டியது தான். நீங்கள் கூட உங்களுக்கு பிடித்த பெயரை வானிலை ஆராய்ச்சி மைய்யத்துக்கு அனுப்பி வைக்கலாம். ஒருவேளை அடுத்து வரும் புயலுக்கு நீங்கள் பரிந்துரை செய்த பெயரை சூட்டுவதற்கு வாய்ப்பும் உள்ளது.

Monday 15 August 2022

எவ்வளவு மதுபானம் அருந்தினால் சட்டப்படி வாகனத்தை இயக்கலாம்

 

      MOTOR VEHICLE ACT 1988 - SECTION 185, 202 சட்டப்படி வாகனம் செலுத்தும் போது, நமது 100மில்லிகிராம் ரத்தத்தில் 30mg ஆல்ககால் இருந்தாலே, காவல் துறை எந்தவித வாரண்டும் இல்லாமல் அரஸ்ட் செய்யலாம். அது மட்டும் இல்லாமல் ஆல்ககால் டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் போது, நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், காவல்துறை நம்மை அரஸ்ட் செய்யும். நாம் மது அருந்தியது உறுதி செய்யும் பட்சத்தில் முதல் முறைக்காக ரூபாய் 10,000 அபராதமும் மற்றும் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனையும் கிடைக்கும். அதே குற்றத்திற்காக மீண்டும் பிடிபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் அல்லது ரூபாய் 15,000 அபராத தொகையாக பெறப்படும்.

 

      SECTION 128ன் படி TRAFFIC போலீஸ் நமது வாகனத்தின் சாவியை எடுத்தாலும் அது சட்டபடி குற்றமாகும். அப்படி சாவியை எடுத்தும் செல்லும் அதிகாரி மீது வழக்கு தொடரவும் நமக்கு முழு உரிமை உள்ளது.

 


      2006 ஆண்டு அறிமுகபடுத்தபட்ட AUTOMOTIVE AMENDMENT BILL - 2006 -ன் படி, தலைகவசம் அணியாமல் சென்றதற்காக அவதாரம் செலுத்தி இருந்தாலோ, அல்லது வேற எதாவது ஒரு காரணத்திற்காக அவதாரம் செலுத்தி இருந்தாலோ, மீண்டும் அதே நாளில் அதே காரணத்திற்காக அவதாரம் செலுத்த தேவையில்லை.

Wednesday 10 August 2022

இந்த வருடங்களுக்கு முன் திருமணம் செய்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லையா ?


       1956-ல் இந்து வாரிசு உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தமும் செய்யப்பட்டது. 

 

      அதன்படி கடந்த 25.03.1989 க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வ சொத்தில் பாக பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்விக சொத்தில் பாக பிரிவினை கோர உரிமை உண்டு. ஆனால், சொத்து பாகப்பிரிவினை 25.03.1989 க்கு முன்பு செய்யபட்டிருந்தால் அந்த சொத்திலும் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 

 


      இது தொடர்பாக டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், "இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்கள் அந்த சொத்திலும் உரிமை கோர முடியாது" என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

      இதை தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2015 மற்றும் 2018-ல் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான கேள்விகள் எழுந்தது. 

 

      இதற்கிடையே டெல்லி உச்ச நீதிமன்றம் தீருப்புக்கு எதிராக சுப்ரீம்கோர்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நாசர், மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 


      அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களை போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது. "ஒரு இந்து குடும்பத்தில் அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம் - 2005 திருத்ததிற்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு." என்று தீர்ப்பு வழங்கினர்.. 

 

ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது.

பச்சை குத்திகொண்டால் அரசு வேலை கிடைக்குமா ?

 

      நாம் காதலிப்பவர்களின் பெயர்களை பச்சை குத்தி கொள்வது, அப்பா அம்மா பெயர்களை பச்சை குத்திகொள்வது, நமக்கு புடித்த வேலையை பற்றி பச்சை குத்தி கொள்வது, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் பண்டைய காலத்தில் பச்சை குத்திக்கொள்வது ஒரு கலாச்சாரமாகவே இருந்து வந்தது. திருமணம் ஆன ஒரு நபரை அடையாளபடுத்த மணமக்களின் உடம்பில் பச்சை குத்தப்பட்டது. மற்றும் சில பேர் அவர்களின் சாதியை அடையாளபடுத்துவது போலவும் பச்சை குத்திக்கொண்டனர்.

 

      5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஒரு மம்மியின் உடம்பில் 57 இடங்களில் பச்சை குத்தபட்டிருந்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். இது தான் உலகின் மிகவும் பழமையான TATTOO என்று அழைக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒருவகையான கறிபொடி மற்றும் தாய்பால் வைத்து ஒரு கூர்மையான கம்பி மூலமாகவோ அல்லது இறந்த மனிதர்களின் எலும்புகளை வைத்தும் பச்சை குத்தி வந்தார்கள். 

 

      நாம் பச்சை குத்திகொள்வது என முடிவு எடுத்து விட்டால், முதலில் கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு நல்ல திறமையான பச்சை குத்தும் நபரை தேர்ந்தெடுத்து, பச்சை குத்திகொள்ள வேண்டும். ஏனென்றால், திறமை இல்லாத நபரிடம் சென்றால் பச்சை குத்தும் பொழுது ரத்த கசிவு ஏறட வாய்ப்பு உள்ளது. மற்றும் அந்த நபர் பச்சை குத்த பயன்படும் கூர்மையான ஊசியை, பச்சை குத்தும் முன் மாற்றுகிறாரா என்பதை கவனிக்க வேண்டும். அது மட்டும் அல்லாமல், அவர்கள் பயன்படுத்தும் கையுறை, மை வைக்க பயன்படும் கிண்ணம் இவை அனைத்தும் ஒரு முறை தான் பயன்படுத்துகிறார்களா என்பதை தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும். பச்சை குத்திகொண்ட பிறகு கிருமி நாசினி சோப் மூலம், பச்சை குத்திகொண்ட இடத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

 

      இந்த மாதிரி பச்சை குத்திகொண்டால் அரசாங்க வேலை கிடைக்குமா என்று கேட்டால், அந்த மாதிரி எந்த ஒரு விதிமுறைகளும் இல்லை. ஆனால் எந்த இடத்தில் பச்சை குத்திக்கொள்ள வேண்டும் என்று விதிமுறை உள்ளது. INDIAN ARMY, NAVY மற்றும் AIR FORCE யை சேர்ந்தவர்கள், கை முட்டியில் இருந்து மணி கட்டு வரை மட்டும் தான் பச்சை குத்த வேண்டும். அதிலும் முக்கியமாக எந்த ஒரு மதத்தையும் தரக்குறைவாக பதிவு செய்ய கூடாது. அதேமாதிரி IPS மற்றும் IAS போன்ற பணிக்கு செல்ல முயற்சி செய்பவர்கள் உடம்பில் எந்த இடத்தில் வேண்டும் என்றாலும் பச்சை குத்தி கொள்ளலாம், ஆனால் அது வெளியே தெரியும்படியாக இருந்தால், அதை பற்றி நேர்காணலில் கேள்வி கேட்க வாய்ப்பு உள்ளது. காவல் துறையில் சேர விருப்பம் உள்ளவர்களும் பச்சை குத்தி கொள்ளலாம், ஆனால் காவல் துறையில் ஒழுக்கம் சார்ந்த நடவடிக்கைகளை கவனிப்பார்கள், இதன் மூலம் நீங்கள் ஒழுக்கமான நபர் தானா என்பதை கண்காணிப்பார்கள். 

 


      பச்சை குத்தி கொண்டால் ரத்த தானம் செய்யலாமா என்பதை பற்றி சிலருக்கு சந்தேகம் வரலாம். தாரளாமாக ரத்தம் கொடுக்கலாம், அனால், பச்சை குத்திகொண்ட நாளில் இருந்து 3 மாதம் முதல் 6 மாதங்கள் வரை ரத்தம் கொடுக்க கூடாது. இந்த கால அளவு ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் மாறுபடக்கூடும். கொடுக்கவே கூடாது என்றெல்லாம் கிடையாது.

Monday 8 August 2022

விவாகரத்து பெற்ற பின் ஆண் குழந்தை யாருக்கு சொந்தம் ?

 


விவாகரத்து பெற்றபின் ஆண் குழந்தை யாருக்கு சொந்தம் ?

HINDU MINORITY & GUARDIANSHIP ACT 1956 பிரிவு (6)ன் படி ஆண் பிள்ளையோ அல்லது திருமணம் ஆகாத பெண் ஆகிய இருவருக்கும் அவர்களது உடல், வாழ்க்கை, சொத்துகள் அனைத்துக்கும் தந்தை தான் காப்பாளராக இருக்க முடியும். அவருக்கு பிறகு தான் தாய். ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ ஐந்து வயது வரை தாயின் அரவணைப்பில் இருப்பது சிறந்தது. இது பொறுப்பு மட்டுமே தவிர காப்பாளர் என்று உரிமை கோர முடியாது.

 

ஒருவேளை தந்தை மனநிலை சரியில்லாதவராக இருந்தால் கூட, தாய் தானாக பொறுப்பேற்கும் காப்பாளராக இருக்க முடியாது. அவர் தன்னை காப்பாளராக நியமிக்க கோரி நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். 

 

அதே நேரத்தில் சட்டத்திற்கு எதிர்மாறாக பிறந்த குழந்தைகள் என்றால், தாய் தான் காப்பாளராக இருக்க முடியும். அதன் பிறகு தான் தந்தை. 

 


ஆனால் சமீப காலத்தில் தாய், தந்தை இருவரில், குழந்தை யாரிடம் வளர்ந்தால் பாதுகாப்பு என்பதை ஆய்வு செய்து அவரிடம் குழந்தை ஒப்படைக்க வேண்டும் என்று தீர்ப்புகள் வருகிறன என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 10 July 2022

ஆண்களை விட பெண்கள் அதிக ஆண்டுகள் உயிர் வாழ்வது ஏன்

 

      பொதுவாக ஆண்களைவிட  பெண்கள் சராசரியாக 3.6  ஆண்டுகள் அதிக காலம் உயிர் வாழ்வதாக உலக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளில் இந்த வயது வித்தியாசம் இன்னும் அதிகம். (இது சராசரி கணக்கு தான்) இதற்கான காரணங்களை மாஸ்கோ வளர்ச்சி உயிரியல் ஆராய்ச்சி  நிலைய நிபுணர் ஒருவர் விளக்கியுள்ளார். அதன் சாராம்சம் வருமாறு.


      சூழ்நிலைகளை தாங்கும் சக்தி பெண்களிடம் அதிகம் உள்ளது. சூழ்நிலைகள் எப்போதும் மாறிக்கொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஏற்ப மாறி கொள்ளும் இயல்புள்ள உயிரினம் மட்டும் தான் நிலைத்திருக்க முடியும். மனித உயிரினம் சம்பந்தப்பட்ட வரை, புதிய சூழ்நிலை அம்சங்களை சேகரித்துக் கிரகித்துக் கொள்ளும் பணியை ஆண்பாலார் செய்ய வேண்டி இருக்கிறது. இந்த புதிய அம்சங்களை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு விட்டு செல்லும் பணி பெண்களை சேர்ந்தது. 

 

      இவ்வாரு புதுமையின் தாக்கத்தை உணரும் "Sensing"  விதத்தில் ஆணின் உடல் அமைப்பு  மேன்மையுடையதாக உள்ளது. அதில் ஏற்படும் ஆபத்தை தாங்கும் சக்திக் அதற்கு இல்லை. உதாரணமாக, பெண்களின் தோலை அடுத்து அதிக கொழுப்பு சக்தி படிந்திருப்பதால், குளிரை தாங்கும் ஆற்றல் ஆண்களைவிட பெண்களுக்கு அதிகம். 


      இதே போல், மாரடைப்பு, புற்றுநோய், மனநோய்   போன்ற நவீன வியாதிகள் பெண்களை விட ஆண்களையே அதிகம் பாதிக்கிறது. மற்றும் மனித இனத்தில் பொதுவாக ஏற்படும் மாறுதல்கள் அனைத்தும் முதலில் ஆண்களிடமே ஏற்படுகின்றன. உதாரணமாக பெண்களை விட ஆண்கள் உயரமாக இருகின்றனர். இதன் விளைவாக மனித இனம் முழுவதன் உயரம் அதிகரித்து வருகிறது. 

 

      சூழ்நிலையின் பாதிப்பை   சமாளிக்கும்  திறனை ஆண் பெற்று இருந்தால், பெண்களை விட அதிக காலம்  அவன் உயிர் வாழ்ந்திருக்க முடியும். தர்க்க ரீதியாக பார்த்தால், பெண்ணின் ஆயுட்காலத்தைவிட ஆண்களின்  ஆயுட்காலம் தான் அதிகம் இருந்திருக்க வேண்டும். கர்ப்ப வாசம் முதல் பூப்பு எய்வது  வரை, ஆண்களை விட பெண்கள் முன்னேறுகின்றார். பிறகு பெண்களின் வளர்ச்சி நின்று விடுகிறது. ஆனால் ஆணின் வளர்ச்சி நிற்பதில்லை. 45-55 வயது வரை தான் ஒரு பெண் இனவிருத்தி செய்ய முடியும், ஆனால் ஆண்களுக்கு 60 முதல் 70 வயது வரை இனவிருத்திக்கான சக்தி உண்டு. எனவே சீக்கிரமாக முதிரும் சீக்கிரமாக உதிரவும் வேண்டும். ஆனால் ஆணின் ஒரு இயல்பான பலவீனம் இங்கே குறுகிடுகிறது. 


      அதாவது நீரோட்டத்தோடு செல்லாமல் எதிர் நீச்சல் செய்வது ஆண்களின் இயல்பான குணம். இதன் மூலம் ஆண்கள் தனக்கு தானே ஆபத்தை தேடி கொள்கின்றனர்.

Thursday 7 July 2022

நமது முகத்தில் குடும்பம் நடத்தும் நுண்ணுயிரி


      முகத்தை சுத்தமாகவும் பளிச்சென்று  வைத்து கொள்வதற்காக பலவகையான கிரீம்களையும் வழிமுறைகளையும் பின் பற்றுவது வழக்கம். ஆனால் டெமொடஸ் போளிகிராம் என்ற நுண் துளைகளை சுத்தம் செய்யும் நுண்ணுயிரிகளை பற்றி தெரியுமா, அவை நமது முகத்தின் ஆழத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றன. இவை ஒட்டுண்ணி வகையை சேர்ந்தவை. 

      இரவு நேரத்தில் 0.3 மில்லி மீட்டர் நீளமுள்ள இந்த ஒட்டுண்ணிகள் தோலின் துளைகளை விட்டு வெளியேறி புதிய தோல் நுண் குழாயை கண்டுபிடித்து தங்களுக்கான இணைகளை தேடி அதனுடன் உடலுறவும் கொள்கின்றன. இப்படி மனிதர்களின் முகத்தில் ஆனந்தமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நுண்ணுயிரிகளுக்கு இப்போது ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக ஒரு ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. 


       நுண்ணுயிரிகளின் DNA எனப்படும் மரபணுக்கள் சேதமடைந்து வருவதால், அவை முற்றாக அழியும் நிலையில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. இப்போது நீங்கள் என்ன நினைகிறீர்கள் என்று நன்றாக தெரிகிறது. குளியலறைக்கு மிக வேகமாக சென்று முகத்தில் எதையாவது அழுத்தி தேய்த்து அந்த நுண்ணுயிரிகளை துளைத்து எடுக்க வேண்டும் என்று முயற்சி செய்வீர்கள். ஆனால் அவற்றை அப்படியெல்லாம் கழுவி எடுத்து விட முடியாது. உங்களுக்கு எட்டாத அளவுக்கு ஆழத்தில் அவை வசிகின்றன. 

      நம்மில்  90 சதவீதம் மக்கள் இந்த ஒட்டுண்ணிக்கு நமது முகத்தில் இடமளித்து வைத்துள்ளோம். ஏனென்றால் தாய் பால் குடிக்கும் காலத்திலேயே பரவி விடுகிறது. இத்தகைய நெருக்கமான உறவை கொண்டிருக்கும் நுண்ணுயிரிகளுக்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும் என்று ஆய்வில் பங்கேற்ற ரீடிங் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்ஸ்சாண்டர் பெரோசி கூறுகிறார். 


      அவை மிக சிறியவை ஆனால் அழகானவை, அவை நமது முகத்தில் இருப்பதால் கவலைப்பட ஒன்றும் இல்லை. அவை நமது தோலின் துளைகளை சுத்தம் செய்து அழகாக வைத்திருகின்றது என்கிறார். கவலை படாதீர்கள் உங்களுடன் ஒரு சிறிய உயிரினம் வாழ்வதை நினைத்து. மகிழ்ச்சியாக இருங்கள். அவை எந்த சேதத்தையும் ஏற்படுத்தாது. அவற்றுடன் நமது உறவு எவ்வளவு நெருக்கமாக உள்ளது என்று இந்த ஆய்வு காட்டுகிறது. ஆனால் இவை எந்த பூச்சி உயிரினத்தை காட்டிலும் மிக குறைந்த எண்ணிக்கையிலான மரபணுக்களை கொண்டிருக்கின்றன என்பதை பற்றிய ஆய்வுகள் நடந்து கொண்டிருகின்றன. புற ஊதா கதிர்களில் இருந்து தனது உடலை பாதுகாக்கும் மரபணுவை இந்த நுண்ணுயிரிகள் இழந்துவிட்டன. அதனால் அவை இரவில் மட்டுமே செயல்படுகின்றன. அந்த இரவு நேர செயல்பாடு தான் உங்களை நெருட வைக்கும். 

      இரவில் நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது அவைகள் உடலுறவு கொள்வதற்கும் இனபெருக்கம் செய்வதற்காகவும் நமது முகத்தில் உள்ள துளைகளுக்குள் செல்கிறது என்கிறார் பெரொட்டி. ஆமாம் நமது முகத்தில் உள்ள துளைகளை அவைகள் தங்களது படுக்கை அறைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் அவற்றின் மரபணுக்கள் பாதிக்கப்பட்டு வருவதால் அந்த ஒட்டுண்ணிகள் நம்மை சார்ந்திருப்பது அதிகரிக்கிறது. அதாவது அவை அழிந்து போகும் அபாயத்தில் இருப்பதாக ஆய்வுகள் காட்டுகிறது. அவை அழிந்து போனால நமக்கு என்ன பிரச்சினை என்கிறீர்களா.


       அவை நமக்கு ஆரோக்கியமான சருமம் அழிகின்றன. அவை அழிந்தால் சருமத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்று பெரொட்டி கூறுகிறார்.