Tuesday 2 July 2024

2028ல் சுக்கு நூறாக சிதற போகும் பூமி

 

     2028 ம் ஆண்டில் அக்டோபர் மாதம் பெரிய விண்கல் ஓன்று மோதி பூமி சுக்கு நூறாகப் போகிறதா?. 1998 ல் மசாசூசெட்ஸ்  மற்றும் கேம்ப்ரிட்ஜ்  அஸ்ட்ரோ பிசிக்ஸ் சென்டரைச் சேர்ந்த விஞ்ஞானிகள், "1997 XF11"  என்று பெயரிடபட்டிருக்கும்  விண்கல், பூமி மீது மோதும் சூழ்நிலை ஏற்பலாம் என்று சொல்லவே, உலகமே பீதிகுள்ளாகியது.

     650 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பத்து கிலோ மீட்டர் அகலமே உள்ள சிறிய விண்கல் ஓன்று  பூமி மீது மோதியது. அது வெளிபடுத்திய சக்தி எவ்வளவு தெரியமா? ஆயிரம் கோடி மெகா டன் டி.என்.டி. (TNT) ஆகும். 600 கோடி ஹிரோஷிமா அணுகுண்டிற்கு சமம். தென் அமெரிக்காவில் மோதிய அந்த விண்கல் ராட்சஸ அலைகளை எழுப்பி சிதறச் செய்தது. உஷ்ணம் மேலிட்டு நீராவியும் தூசியும் எழுந்தது பூமியின் மேற்புறத்தைச் சூழ்ந்து கொண்டது.

     விளைவு, நீடித்த இருள், நீடித்த குளிர், இந்த நிலை 70 சதவிகித புவி வாழ் உயிரினங்களை அழித்தது. அதில் அழிந்தது தான் டைனோசர் இனமும் கூட. இதே நிலை மீண்டும் வந்து விடகூடது என்ற கவலையில் உலகமே விஞ்ஞானிகளைப் பரிதாபமாகப் பார்த்தது. பூமிக்கு 48,000 கிலோமீட்டர் அருகில் வரபோகும் விண்கல் கணக்கு சிறிது பிசிராக இருந்தாலும் மோதி விட்டால் என்ன செய்ய முடியும் என்ற யோசனையில்...


       அவசரம் அவசரமாக ஒரு பெரிய குழு இதை மீண்டும் ஆராய தொடங்கியது. பிறகு விண்கல் பூமியை 9,60,000 கிலோ மீட்டர் தூரம் தள்ளிப் போகும் என்ற நல்ல செய்தி கிடைத்தது. ஆஹா, பூமி ஒரு வழியாகப் பிழைத்தது. ஆனால், இந்த பீதி, விஞ்ஞானிகளை வேறொரு கோணத்தில் சிந்திக்க வைத்தது. இன்னொரு விண்கல் வந்தால் ?....

     பூமிக்கு அருகில் உள்ள பொருட்களை Near Earth Object என்று கூறுவர்.  N.E.O என்று சுருக்கமாகச் சொல்லலாம். இப்படிப்பட்ட  என்.இ.ஓக்களை பற்றி ஒரு தனி ஆய்வு செய்ய வேண்டும் என்ற சிந்தனை  மேலோங்கியது. நாஸாவின் ஜெட் புரபல்ஷன் லாபரட்டரி கலிபோர்னியாவில் உள்ளது. இங்கே என்.இ.ஓக்களைப் பற்றி ஆய்வு அலுவலகம் தொடங்கப்பட்டது.

     இந்த விஷயத்தில் நிபுணரான டான் யோமான்ஸ் இதன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கிறார். பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அருகில் உள்ள 2000 பொருள்களில் 90 சதவீகிதம் பொருள்களைக் கவனிப்பது என்று தீர்மானிக்கபட்டது. இந்த ஆய்வு முடிய சுமார் பத்து ஆண்டுகள் ஆகும். இதற்குப் பல கோடி டாலர் செலவு ஆகுமே என்று கூறும் போது. இதற்கு அமெரிக்கர்களின் பதில் என்ன தெரியுமா ?

 

     "ஆனால் என்ன? 'தீப் இம்பாக்ட்' 'ஆர்மெகடான்' "ஆகிய படங்கள் எடுத்த செலவுதானே இது என்கின்றனர். இந்த இரு படங்களுமே பூமியைத் தாக்க வரும் விண்கற்களிலிருந்து பூமி காப்பாற்றபடுவதை கருவாகக் கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

       "2028 Doomday; flase alarm" என்று ஆகிவிட்ட போதிலும், என்றுமே நிரந்தரமாக மனித இனத்தைக் காக்க ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இப்போது என்.இ.ஒ ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Friday 31 May 2024

அதீத வெளிசத்தால் பருவமடையும் சிறுமிகள்

 

      இரவும் அடர்ந்த இருளும் தானே நமக்கு ஆபத்தையும் பயத்தையும் தருகிறது.  மாறாக அச்சத்தை போக்குகிறது. துணிவை தருகிறது. இரவில் கூட வேலை பார்க்க முடிகிறது. அப்படிபட்ட ஒளி எப்படி ஆபத்தாக முடியும், உண்மைதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இயற்க்கை நமக்கு 12 மணி நேரம் பிரகாசமான சூரிய ஒளியையும், 12 மணி நேரம் அடர்ந்த இருளையும் கொடுத்திருகிறது. இரண்டுக்குமே இரண்டு விதமான கடமைகள் இருகின்றன. நமது உடலும் மற்ற உயிரினங்களும். 12 மணி நேரம் ஒளி மாற்றத்திற்கு ஏற்றார் போல தான் உருவாக்கப்பட்டுள்ளன.

ஆனால் நாம் செயற்கையாக உருவாக்கும் விளக்குகளால், இரவின் பொழுதை குறைத்து விட்டோம். இதன் மூலம் மரம், செடி, கொடி, ஊர்வன, பறப்பன, விலங்குகள் மற்றும் மனிதர்கள் என்று எல்லாவற்றையும் பாதிப்புக்குள்ளாக்கி விட்டோம். மின் விளக்குகள் கண்டுபிடிக்காத காலத்திற்கு முன் இருக்கும் இரவு நேர வானத்திற்கும், இப்போது இருக்கும் இரவு நேர வானத்திற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. வானத்திலும் ஒளி மாசு பிரதிபலிக்கிறது. இதனால் நட்சத்திரத்தையும் கிரகத்தையும் ஆராய்ச்சி செய்யும் ஆராச்சியாளர்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.


      அவர்கள் மட்டும் அல்ல. இரவுகளில் வேட்டையாடும், விலங்குகளும் பறவைகளும் இந்த வெளிச்சத்தால் குழப்பம் அடைகின்றன. கடல் ஆமைகள், கடலில் இருந்து சற்று தொலைவில், அடர்ந்த இருளான இடத்தில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் தன்மை உடையது. ஆனால், இந்த ஆமைகளும் கலங்கரை விளக்கு ஒளியாலும், கடலுக்கு அருகில் இருக்கும் கட்டிடத்தின் ஒளியாலும் பாதிக்கப்பட்டு இனபெருக்கத்தையே குறைத்து வருகின்றன. பறவைகள் நிலவின் ஒளியை வைத்து அதன் மூலம் தாங்கள் உள்வாங்கி கொண்ட திசை வழியாக இடம் பெயருகின்றன. அந்த பறவைகளின் பாதைகளில் குறிக்கிடும் பெரிய கட்டிடங்களின் ஒளியால் கவரப்பட்டு திசை மாறி அதில் மோதி இறகின்றன. உலகும் முழுவதும் லட்ச கணக்கான பறவைகள் வருடம் தோறும் இப்படி தான் மடிகின்றன. வீட்டின் வெளிப்புறம் இருக்கும் மின் விளக்குகள், அதாவது தெருவிளக்கு விளம்பர பலகைகளின் ஒளி விளக்கு போன்றவற்றால் கவரப்படும் பூச்சிகள் விடியும் வரை அந்த விளக்கையே சுற்றி சுற்றி வருகின்றன. அதனால் உணவும் சரியாக எடுத்து கொள்ளாமல் இனச் சேர்க்கையும் நடைபெறாமல், பூச்சி இனங்களே வெகு வேகமாக அழிய தொடங்குகின்றன. பூச்சிகள் அழிந்தால் தானே அழியட்டும் என்று விட்டு விட முடியாது. உயிரினங்களின் உணவு சங்கிலி கட்டாயம் பாதிக்கப்படும். 

     சரி பறவைகளும் பூட்சிகளுக்கும் தானே இந்த பாதிப்பு நமக்கு ஏதும் இல்லையே என்று நிம்மதியாக இருந்து விட முடியாது. இது மனிதர்களுக்கு என்ன என்ன பதிப்பை ஏற்படுத்துகின்றது என்று ஆராச்சியாளர்கள் வகைபடுத்தி கூறுகிறார்கள். உலகிற்கு எப்படி 12 மணி நேரம் பகல் மற்றும் 12 மணி நேரம் இருள் இருக்கிறதோ அதே போல் உயிரினங்களின் உடலுக்குள்ளும் ஒரு  கடிகாரம் இருக்கிறது. அது தான் உயிர் கடிகாரம். அது தான் நமது தூக்கத்தையும் விழிப்பையும் தெரிவிக்கிறது. செயற்கை ஒளியால் பாதிப்பது உயிர் கடிகாரம் தான் நமது உடல் 12 மணி நேரம் வெளிச்சத்திலும் 12 மணி நேரம் வெளிச்சம் இல்லாத இருளில் இருக்க வேண்டும்  என்பது  தான் இயற்க்கையின் நியதி.

 


      சூரிய ஒளி உடல் வளர்ச்சி மற்றும் வலிமைக்கான காரணங்களை தூண்டி விடுகின்றது. இதே தூண்டுதல் நாம் உபயோகிக்கும் ஒளியிலும் உண்டு. 1860ம் ஆண்டுகளில் பெண்கள் வயதுக்கு வருவது 16 வயதில் இருந்து 19 வயதாக இருந்தது. இப்போது அது 8 வயதில் இருந்து 15 வயதாக குறைந்திருக்கிறது. இதற்கு உணவு உட்பட பலகாரணங்கள் இருந்தாலும், முக்கிய காரணமாக சொல்லபடுவது இந்த ஒளிதான். சூரிய ஒளி பெண்ணின் ஹோர்மோனை தூண்டி விடுகிறது. வெப்பம் அதிகம் உள்ள நாடுகளில் பெண்கள் விரைவாக வயதுக்கு வந்து விடுகிறார்கள்.

     சூரிய ஒளி குறைவாக உள்ள நாடுகளில், அதாவது ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெண்கள் தாமதமாக வயதுக்கு வந்துகொண்டிருந்தாகள். ஆனால் இப்போது வெப்ப நாடுகள், குளிர் நாடுகள் என எல்லாம் ஒரே மாதிரியாக பெண்கள் விரைவாகவே வயதுக்கு வந்து விடுகிறார்கள். இதற்கு காரணம் இரவிலும் பகல் போல் ஒளிரும் ஒளி விளக்குகள் தான் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இன்று வகுப்பறைகள், வீடுகள், கடைகள் என எங்கும் இரவை பகலாக்கும் பிரகாசமான வெளிச்சம் இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தொலைக்காட்சி, கணினி போன்ற வெளியிடும் கதிர்வீச்சும் சூரிய ஒளிக்கு இணையான தாக்கத்தை உண்டாக்குகின்றன. 

 


     தொடர்ந்து ஒளியின் தாக்கம் உடல் மீது பட்டுக்கொண்டே இருப்பதால், ஹார்மோன் தொடர்ந்து சுரந்து கொண்டே இருக்கிறது. அதனால் சிறு வயதிலேயே பெண்கள் சதைபிடிப்போடு வளருகிறாகள் மற்றும் விரைவிலேயே பருவத்துக்கும் வந்துவிடுகிறார்கள். சின்ன வயதில் பெரிய மனிசி ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம். சிறுமிகள் வயதுக்கு வந்ததும் பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் அதிகம் சுரக்க தொடங்குகின்றன. இந்த சுரப்புகள் எலும்புகளின் வளர்ச்சியை தடை செய்து விடுகின்றன. இந்த சிறுமிகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். 14 வயதுக்கு பின் பருவம் அடைந்த பெண்களை விட அதற்கு முன்பே பருவம் அடைந்த பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 4 மடங்கு அதிகம் என்று அமெரிக்க மருத்துவ ஆய்வு ஓன்று தெரிவிக்கிறது. 

     ஒளியின் பாதிப்பு இதோடு முடிந்துவிடுவதில்லை. வெளிச்சமற்ற அடர் இருளில் தூங்கும்போது, மேலெடோன் என்கிற ஹார்மோன் சுரக்க துவங்குகிறது. இது தான் நமது ஆரோக்கியத்தின் உயிர்நாடி. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும், நன்றாக தூங்கவும், கொழுப்பை நீக்கவும் இந்த ஹார்மோன் உதவுகிறது. மேலும் தைராயிடு, பெண்ணின் கருமுட்டை, ஆணின் விரைகள் நன்றாக செயல்பட, இந்த மேலெடோனேன் மிக முக்கிய பங்கு வகுக்கிறது. ஆனால் இரவில் தொடர்ந்து, உடலில் வெளிச்சம் பட்டுக்கொண்டே இருக்கும்போது, இந்த ஹார்மோன் சுரப்பு வேகமாக குறைந்து போகிறது. இதனால் தலைவலி, மன அழுத்தம், தூக்கமின்மை, உடல் பருமன், சர்க்கரை நோய், மார்பக புற்றுநோய், ஆண்மை குறைவு, மலட்டு தன்மை போன்ற பல பாதிப்புகள் உருவாகுகின்றன.

 



     விளக்கை விரைவாக அனைபதின் மூலம், இப்படி தோன்றும் அத்தனை நோய்களையும் ஒரு பைசா செலவு இல்லாமல் சரி செய்துவிடலாம், கூடவே நமது பழக்கவழக்கத்தையும் கொஞ்சம் மாற்றி கொண்டால் போதும், இரவு 11 மணி, 12 மணிக்கு தூங்க செல்லுபவர்கள் தொலைக்காட்சி, கணினிக்கு விடை கொடுத்துவிட்டு, 10 மணிக்கு முன்பே தூங்கிவிடுங்கள். படுக்கை அறையில் இரவு விளக்கும் அணைக்கப்பட்டு அடர் இருளில் தூங்க பழகுங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாக தான் இருக்கும். போக போக நல்ல தூக்கம் வரும். சர்க்கரை நோய், மன அழுத்தம் இவை எல்லாமே குறைய தொடங்கும். இரவை முழுமையாக அனுபவித்தாலே போதும், எல்லா வியாதியும் நம்மைவிட்டு சென்றுவிடும், 

     ஒளியால் ஏற்படும் இத்தனை பாதிப்புகளை பார்த்த பின்பே, மேலை நாடுகளில் இப்போதிருந்தே பாரம்பரிய இரவை மீட்போம் என்ற பெயரில் பல இயக்கங்களை, சுற்றுசூழல் ஆர்வலர்கள் ஆரம்பித்துவிட்டார்கள். அனால் நமது இந்தியாவில் அதற்கான அடி சுவடு கூட ஏற்படவில்லை. இதனை ஒளிமாசு என்கிறார்கள். உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் 30 சதவிகிதம் விளக்குகள் தேவைக்கும் அதிகமாக ஒளிர்கின்றது. என்கிறது. சர்வதேச இருள்வாழ் அமைப்பு, நியுயார்க் நகரில் மட்டும் வீடுகளுக்கு வெளியே ஒளிரும் மின்விளக்குகளுக்குள் மட்டும் வருடத்துக்கு 2.1 கோடி டன் கார்பன்டை ஆக்ஸைடை வெளியேற்றுகின்றன. இந்த நகரில் உள்ள மாசை சரி செய்வதற்கே 87.5 கோடி மரங்களை வளர்க்க வேண்டும் என்கிறது அந்த அமைப்பு. 


      அதைவிட சில எளிமையான வழிமுறைகள் இருகின்றன. தேயில்லாத இடங்களில் இருக்கும் விளக்கை அகற்றுவது. வான் நோக்கி பாயும் ஒளியை தடுத்து நிலத்தில் மட்டும் விழும்படி விளக்கை சுற்றி கவசம் இடுவது. வீடு மற்றும் அலுவலத்தில் எரியும் தேவையில்லாத விளக்குகளை அணைப்பது போன்றவற்றை சரி செய்தால், 60 முதல் 70 சதவீதம் ஒளி மாசுபடுவதை தவிர்த்துவிடலாம் என்கிறது இந்த ஆய்வு முடிவுகள். 

     எது எப்படியோ, இயற்க்கை தான் மீண்டும் வலியது என்பதையே இது காட்டுகிறது. இதனால் நாமும் தேவையற்ற ஒளிகளை குறைத்து, இருளில் படுத்து பாரம்பரிய இரவை மீட்போம், இருள் உடலுக்கு நல்லது.

Thursday 11 April 2024

27 பிரசவங்களில் 69 குழந்தைகள் பெற்று சாதனை செய்த சிங்க பெண்


     சாதனைகள் பலவகைபடும். சில சாதனைகள் குறுகிய காலத்தில் முரியடிக்கபட்டுவிடும். சில சாதனைகள் எந்த காலத்திலும் முரியடிக்கப்படாமலே இருக்கும். அப்படி ஒரு சாதனையாகத்தான் குழந்தைகளை அதிகம் பெற்று சாதித்த சில தம்பதிகள் இருக்கிறார்கள். ஆஸ்ட்ரேலியாவை சேர்ந்த பிஎடேர் வாசில்யேவ்  என்பவருடைய முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் எண்ணிக்கை மட்டும் மொத்தம் 69. இத்தனை குழந்தைகள் பிறந்த இடைப்பட்ட காலம் எவ்வளது தெரியுமா? வெறும் 40 வருடம் இடைவெளியில் தான். அதாவது 1725 முதல் 1765 வரை. மொத்தம் 27 பிரசவம் மூலம் 69 குழந்தைகள் பிறந்தன. எல்லா பெண்களுக்கும், ஒரு பிரசவத்தில் ஒரு குழந்தை தான் பிறக்கும் என்றால், இந்த பெண்மணிக்கு 27 பிரசவங்களில் ஒன்றில் கூட ஒரு குழந்தை பிறக்கவில்லை என்பது ஆச்சரியம். 

     எல்லா பிரசவதிலுமே 2,3,4, என குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். 16 பிரசவங்களில் 2 குழந்தைகளாக பெற்றுள்ளார். இதன் மூலமே 32 குழந்தைகள் பிறந்துவிட்டன. 7 பிரசவத்தில் 3 குழந்தைகள் வீதம் 21 குழந்தைகளும், 4 பிரசவத்தில் 4 குழந்தைகள் வீதம் 16 குழந்தைகளும், ஆக மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். இந்த சாதனையை எந்த பெண்ணும் இது வரை முறியடிக்கவில்லை. அதிக குழந்தைகள் பெற்றதோடு மட்டும் இவருடைய சாதனைகள் நின்றுவிட வில்லை. உலகிலேயே மிக அதிகமாக இரட்டை குழந்தை பெற்றேடுத்ததிலும், அதிகமாக முறை 4 குழந்தைகளை பெற்றேடுததிலும் சிறப்பு பெறுகிறார்.

 

     ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகளை பெற்றெடுத்தது யார் என்று பார்த்தால், அந்த பெருமை அமெரிக்காவில் உள்ள நடேய சுலைமான்க்கு போகிறது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் இவருக்கு பிறந்தன. அதில் 6 ஆண் குழந்தைகள் 2 பெண் குழந்தைகள். கலிபோர்னியாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அறுவைசிகிச்சை மூலம் இந்த குழந்தைகள் பிறந்தன. நடேயாவுக்கு மொத்தம் 14 குழந்தைகள்.

     மலைசியாவை சேர்ந்த சுரேனா மட்சாட் என்ற பெண்ணுக்கு 1999 ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதி ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள் பிறந்தன. ஆனால் இந்த குழந்தைகள் 6 மணி நேரம் கூட உயிருடன் இல்லை. இது தான் ஒரே பிரசவத்தில் அதிக குழந்தைகள் பிறந்ததற்கான சான்று. 

     சரி பெண்களில் அதிக குழந்தைகள் பெற்றவர்களை   பார்த்தோம், ஆண்களில் அதிக குழந்தைகளை பெற்றது யார் என்று பார்த்தால், முதலில் தோன்றுவது, பல பெண்களை மனைவியாக்கி கொள்ளும் பழக்கம் கொண்ட மொராக்கோ நாட்டின் சக்கரவர்த்தியான, மௌலேஷ்க்கு கிடைகிறது. கி.பி. 1703 ம் ஆண்டு வரை இவருக்கு 867 குழந்தைகள் இருந்தன. இதில் 525 மகன்களும் 342 மகள்களும் இருந்தனர். 1721 ம் ஆண்டுக்கு மேல் இவருக்கு எத்தனை குழந்தை பிறந்தது என்று கணக்கில் வைத்து கொள்ளவில்லை என்கிறார்கள். தோராயமாக 1000 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் என்று கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். 

 

     பல மனைவிகள் மூலம் இத்தனை வாரிசுகளை உருவாக்கினார் என்றால், ஒரே மனைவி மூலம் அதிக வாரிசுகளை உருவாக்கிய பெருமை அமெரிக்காவை சேர்ந்த சாமுவேல் எல்மாஸ்ட் பெறுகிறார். 1992 ம் ஆண்டு அக்டோபர் 15 ல் தனது 96 வது வயதில் இவர் இறக்கும் போது இவருடைய மொத்த வாரிசு 824. தனது 11 மகன்கள் மூலம், 97 பேரன்களும், அவர்களின் மூலம் 634 கொள்ளு பேரன்களும், அந்த கொள்ளு பேரன்களுக்கு 82 எள்ளு பேரன்கள் மூலமாக 824 பேர் வாரிசுகளாக இருந்தனர். இது தான் உலகின் அதிக வாரிசு இருந்ததற்கான சான்று. 


Tuesday 12 March 2024

முதல்வகை சர்க்கரை நோய் ஏற்பட காரணம் என்ன

 

       ஒரு குடும்பத்தில் தாய்க்கோ அல்லது தந்தைக்கோ, இவ்வகை நோய் இருந்து அறிய முடியாத சூழலில் பிறக்கும் குழந்தைகளுக்கு, மரபணு ரீதியாக அக்குழந்தைகள் வளர்ந்து 20 அல்லது 30 வயதை கடப்பதற்கு முன்பாகவே மயக்க நிலைவந்தால் மட்டுமே பரிசோதனைக்கு பின் சர்க்கரை நோயை பற்றி நினைக்க தொடங்குகிறார்கள். ஆயினும் இந்த நிலை தற்காலத்தில் தலைகீழாக மாறி விட்டது.
 
     எப்படியென்றால் பிறந்து 2 வயது அல்லது 3 வயது குழந்தைகளுக்கே இந்த முதல்வகை சர்க்கரை நோய் வருகிறது என்கிறார்கள் அலோபதி மருத்துவர்கள். காரணம் பிறக்கும் போதே கணையத்தில் உள்ள செல்கள் குறைவாகவே இருக்கின்றது. இதனால் அவைகள் இருந்தும் இன்சுலின் என்ற இயக்கு நீரை சுரப்பதற்கு போதிய ஆற்றலை பெற்றிருக்கவில்லை. அதனால் அந்த அணுக்களால் இன்சுலினை சுரக்கவும் முடியவில்லை.
 

     இன்னும் சற்று விரிவாக பார்ப்போமானால், இன்சுலின் அறவே இல்லை என்றால் குளுக்கோஸ் என்னும் சர்க்கரை சத்தை சேமிக்கவும் முடியாது. பயன்படுத்தவும் முடியாத நிலையில் ரத்தத்தில் உள்ள மிகையான சர்க்கரை சத்தை ரத்தத்தில் உள்ள நீருடன் கலந்து அதை சிறுநீரகம் வழியாக வடிகட்டி சர்க்கரை சத்து நீருடன் சிறுநீரக பையில் தங்கி சிறுநீராக வெளியேறி வீணாகிறது. குளுக்கோஸ் இருந்தால் தான் திசுக்களில் உள்ள கொழுப்பை எரித்து சக்தியை உருவாக்க முடியும். இல்லை என்றால் அதிக அளவு அமிலம் உருவாகி அந்த ரத்தம் மூளைக்கு செல்வதால் மூளை செயல்படாமல் கொஞ்ச நேரம் தாமதிக்கும் போது, மயக்க நிலைக்கு கொண்டு போகிறது. மயக்கம் வரும் போது, ரத்தத்தை பரிசோதனை செய்த பிறகு தான் சர்க்கரை நோய் இருப்பதை உறுதி செய்கின்றனர்.
 
     சர்க்கரை வியாதி ஏற்படுவது பரம்பரை காரணமா, அல்லது நம்மை சூழ்ந்துள்ள சூழ்நிலை காரணமா அல்லது சில மனித செயல்பாடுகள் காரணமா என்பதை சரியாக அறுதியுட்டுக் கூற முடியவில்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 
      நாம் சுவாசிக்கும் காற்று மூலம் வைரஸ் கிருமிகள் நேராக  நுரையிரளுக்குச் சென்று ரத்தத்தில் கலக்குகிறது. இவ்வகைத் தொற்று கிருமிகள் கணையத்தில் உள்ள திட்டுகளில் அடங்கியுள்ள கண்ணுக்குத் தெரியாத ஆயிரக்கணக்கான செல்களைத் தாக்கி அவைகளும் பெருகி கணையச் செல்கள் இன்சுலின் சுரப்பதை தடை செய்கிறது. 
 
     ரத்தத்தில் தேவையான அளவு இன்சுலின் கலக்காத நிலையில் ரத்தத்தில் குறிப்பிட்ட விகிதத்தில் இருக்க வேண்டிய கர்க்கரையின் அளவு அதிகமாகிறது. இதைதான் முதல்வகை சர்க்கரை நோய் வருவதற்கான அடிப்படைக் காரணமாக இருக்கிறது என்கின்றனர்.

     இவ்வகை நோய் உள்ளவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகவே இருக்கும். 100 சர்க்கரை நோய் உள்ளவர்களை எடுத்துகொண்டால், அதில் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே முதல்வகை சர்க்கரை நோய் உள்ளவர்களாக இருப்பார்கள்.
 
     குழந்தைப் பருவத்திலேயே ஏற்படும் மயக்க நிலையை அறிந்து  சில பரிசோதனைகள் செய்துபார்க்க வேண்டும். நோய் எர்திர்ப்பு சத்தி அறவே இல்லாத நிலையில் முதலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள மருந்துகளை தொடர்ந்து கொடுப்பதின் மூலம்  கணையத்தில் உண்டான பாதிப்பை குறைத்து வியாதி வருவதை தடுத்து விடலாம்.

மயக்க நிலை வருவதற்கு முன் தோன்றும் அறிகுறிகள்
1      முதலில் நாக்கு உலர்ந்து போகும். 
2      கண்கள் மேல் நோக்கி சொருகும் மற்றும் குழிவிழுந்து காணப்படும்.
3      உடலின் தோல் வறண்டுவிடும்.
4      முகம் வெளுக்கும்.
5      நீண்ட பெருமூச்சு வரும்.
6      நாடித்துடிப்பு அதிகமாக இருக்கும்.
7    சிறுநீரிலும், ரத்தத்திலும் அதிக அளவு சர்க்கரை இருப்பதை சோதனையில் அறியலாம்.
8      ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.
9      திடீரென நினைவிழந்து மயக்கத்திலேயே இருப்பார்கள்.

Saturday 9 March 2024

முதல் வகை சர்க்க்கரை நோய் என்றால் என்ன ?

 

      இந்த நோய் இளமை பருவத்திலேயே வரக்கூடியதாகும். கணையம் என்ற உறுப்பில் எளிதில் பார்க்க முடியாத அளவுக்கு மிக நுண்ணியதாக பல திட்டுகள் உள்ளன. இத்திட்டுகளில் அடங்கியுள்ள செல்களை பீட்டா செல்கள் என்றும் ஆல்பா செல்கள் என்றும் இருவையாக பிரித்துள்ளனர். இச்செல்கள் தூண்டுவதின் மூலம் இன்சுலின் என்ற இயங்கு நீரை சுரக்கின்றது. இந்த இயக்கு நீர்கள் சேமிக்கப்பட்டு இரண்டு நாளங்கள் வழியாக சிறுகுடலில் நுழைந்து உட்புறச் சுவற்றில் உள்ள மெல்லிய மயிரிழை போன்ற விரலிகள் எனப்படுவதில் உள்ள இரத்தத்தில் நேராக கலக்கின்றது. இன்சுலின் கலந்த ரத்தம் இருதயத்துக்குச் சென்று சுருன்குவத்தின் மூலம் நுரையிரளுக்குச் செல்கிறது. நுரையீரலில் சர்க்கரையை சேமிக்கவும், கொழுப்புத் திசுக்களில் கொழுப்பைச் சேமிக்கவும், தசைகளில் புரதம் மற்றும் மாவுச் சத்தை ரத்தத்தில் சேர்க்க செய்கிறது. சேர்ந்தபின் அவ்வாறு கலந்த ரத்தம் மீண்டும் இருதத்திற்கு வந்து இடபக்க கீழறை சுருங்குவதின் மூலம் மகாதமணி வழியாக இச்சத்துகளை இரத்தத்தில் உள்ள ஹிமோகுளோபின் தான் உடலின் பலபாகங்களுக்கும் எடுத்துச் செல்கிறது. பின் மீண்டும் திரும்பும் போது மேலறைகள் விரிகிறது. விரிவடைந்து வலது மேலறைக்கு வந்து, மேலறை சுருங்குவதால் வலது கீழறைக்கு வரப்பெற்று வலது கீழறை சுருங்கும் போது அசுத்த இரத்தம் சிரைகள் வழியாக நுரையீரலுக்கு வந்து சேருகிறது, என்பதை ஏற்கனவே முன்பகுதியில் பார்த்தோம்.


     சுவாசிக்கும் பொது காற்றில் உள்ள பல தோற்று நோய்க்கிருமிகள் உடலினுள்ளே புகுந்து இரத்தத்தில் கலக்கின்றன. சிலவகை தொற்றுக் கிருமிகள் இரத்தத்தில் கலந்தால் காய்ச்சல், அம்மை, சளி போன்ற நோய்கள் முதலில் வரும். வேறு சிலவகை தொற்றுகிருமிகள் இரத்தத்தில் வந்த ஓரிரு மாதங்களில் வளர்ந்து காமாலை போன்ற நோயை உண்டாக்குகிறது, இன்னும் சிலவகை தொற்று நோய்க் கிருமிகள் நம் உடலில் பரவி செல்களை தாக்குகின்றன. உடலில் எப்பாகத்தில் அதிக தாக்குதல் உள்ளதோ, அங்குள்ள உறுப்புகளால் செயல்படமுடியவில்லை, வைரஸ் நோய்க்கிருமிகள் செல்களைத் தாக்கும் பொது கணையத் திட்டுகளில் உள்ள பீட்டா செல்களையும் விட்டு வைக்காமல் தாக்குகின்றன. இதனால் பீட்டா செல்கள் செயல்பட முடியாமல், இன்சுலின் என்ற இயக்கு நீரை சுரக்க விடாமல் தடுத்து விடுகிறது. ஒரு சிலருக்கு மட்டும் பிறவியிலேயே குறையுள்ள செல்களை கொண்டிருப்பதாலும் தொற்று நோய் கிருமிகள் தாக்குதல்களாலும் இன்சுலின் சுரப்பு நிலை அறவே இல்லாத நிலை ஏற்படுகிறது. இது போன்ற நிலைகளில் உள்ளவர்களை முதல் நிலை சர்க்கரை நோய்யுள்ளவர்கள் என்று கூறுகிறார்கள்.


Tuesday 11 July 2023

சர்க்கரை நோய் வராமல் தடுக்க என்ன செய்வது

 

      சர்க்கரை நோய் வராமல் தடுக்க வேண்டுமானால், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். நலவாழ்வு முறைக்கு ஏற்ப வாழ்க்கை முறையில் மாற்றத்தை உண்டாக்கிக்கொள்ள வேண்டும்.

    வயது வித்தியாசம் இல்லாமல், உணவு முறையில் மாற்றம் ஊட்டச்சத்துணவின் முக்கியத்துவம்,  உடல் திறனை அதிகரிக்கும் செயல்பாடுகள், எடைக் குறைப்பில் கவனம் செலுத்துதல் போன்றவற்றில் ஈடுபாட்டால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பை அறுபது சதவீதம் வரை தடுத்துவிடலாம்.


       வாழ்க்கை முறைக்கு ஏற்ற உணவு வகைகளைச் சாப்பிட்டு பழக வேண்டும். அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துகொண்டு, மொத்த கலோரியில் முப்பது சதவீதம் குறைவாகச் சாப்பிட்டாலும் பரவாயில்லை. கொழுப்புச் சத்து பத்து கலோரி அளவு மட்டுமே இருக்குமாறு உணவு முறை இருக்க வேண்டும்.

      மாமிச உணவுகளைவிட இயற்கையான காய்கறிகள் மற்றும் பழங்களில் கொழுப்பு குறைவு, மற்றம் சத்துகள் அதிகம். எனவே, இயற்க்கை உணவுக்குத் திரும்ப வேண்டும்.

 


      தொடர்ந்து உடற்பயிர்ச்சியில் ஈடுபட வேண்டும். நடப்பது நல்லது மோட்டார் சைக்கிளில் செல்வதை விட சைக்கிளில் செல்வது உடல் திறனை அதிகரிக்கும். ஏரோபிக் பயிற்சிகள், இசைக்கு ஏற்ற நடனம் போன்றவற்றில் ஈடுபடலாம். 

      உடல் எடையை அதிகரிக்கவிடாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால், நம்மை நோக்கி சர்க்கரை நோய் வராமல்  தடுத்துவிடலாம்.

      மேலும், முப்பது முதல் நாற்பது வயதாகிவிட்டாலே, ஆண்டுக்கு ஒருமுறை சர்க்கரை நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

  1. குடும்பத்தில் யாருக்கேனும் சர்க்கரை நோய் இருந்தால்.
  2. நீங்கள் அதிக எடையுடன் இருந்தால்.
  3. எவ்வளவு சாபிட்டாலும் காரணமே இல்லாமல் எடை குறைந்தால்.
  4. உடல் உழைப்பு இல்லாமல் இருந்தால்.
  5. காரணமே இல்லாமல் அலர்ஜி மலசிக்கல் இருந்தால்.
  6. மன இறுக்கம்.
  7. அதிகப் பசி.
  8. மிகுதியான தாகம்.
  9. அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
  10. காயங்கள் ஆறாத நிலை. 

 

      போன்றவை இருந்தால், உடனடியாகத் தகுதி வாய்ந்த மருத்துவரை அணுகி, சிறுநீர்ப் பரிசோதனை அல்லது ரத்தப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.

     உணவு சாப்பிட்டு ஒன்றை மணி முதல் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சிறுநீர்ப் பரிசோதனை செய்துகொள்வது தான் சரியான முறை. முதலில் வெளியாகும் சிறுநீரை கழித்துவிட்டு, இரண்டாவது முறை கழிக்கும் சிறுநீரை ஒரு சுத்தமான பாட்டிலில் எடுத்துப் பரிசோதிக்க வேண்டும்.

      மருந்துக் கடைகளில் டயஷ்டிக்ஸ் என்ற பெயரிலோ அல்லது டெஸ்ட் டேப் சுகர் இன் யூரின் என்ற பெயரிலோ கிடைக்கும் பரிசோதனை கிட்டுகளை வாங்கிப் பயன்படுத்தி, சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

      மருந்துக் கடைகளில் பெனடிக்ட் சொல்யுஷன் என்ற கேட்டு வாங்கி, அதில் ஐந்து மில்லி எடுத்து ஒரு சோதனைக் குழாயில் போட்டு ஸ்பிரிட் விளக்கு வெப்பத்தில் கொதிக்கவையுங்கள். பெனடிக்ட் சொல்யூஷன் நிறம் மாறாமல் இருக்க வேண்டும்.

      இரண்டாவது முறையாக எடுத்த சிறுநீரில் இருந்து ஒரு சொட்டு விட்டு மறுபடியும் கொதிக்க வையுங்கள். இப்போது நிறத்தைப் பாருங்கள். நிறம் மாறாமல் நீல நிறத்தில் இருந்தால், உங்களுக்கு சர்க்கரை நோய் இல்லை. மஞ்சள் நிறத்தில் இருந்தால், இரண்டு சதவீதம் வரை சர்க்கரை நோய் உள்ளது என்பதையும், ஆரஞ்சு நிறத்தில் இருந்தால், சர்க்கரை நோய் இருப்பதையும் உறுதிப்படுத்தி கொள்ளலாம். வைட்டமின் மாத்திரைகளைச் சாப்பிட்ட பிறகு சிறுநீர்ப் பரிசோதனை செய்ய வேண்டாம். இதனால், சிறுநீரில் தவறான முடிவுகள் தெரியலாம்.

      ஆண்டுக்கு ஒருமுறை கண், இதயம், பொது உடல் பரிசோதனை மேற்கொள்வது நல்லது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால், அறுவைசிகிச்சை முன்பும், பின்பும் சர்க்கரைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

      உங்கள் கை கால்களில் புண்கள் மற்றும் காயங்கள் ஏற்படாமலும், ஒருவேளை ஏற்பட்டால் அவை விரைந்து ஆருகின்றனவா என்பதையும், அளவுக்கு மீறிய களைப்பு ஏற்படுவதாக இருந்தா, இதயப் பரிசோதனையையும் செய்து கொள்ளுங்கள்.


       திருமணம் செய்துகொள்ளும் முன், மாப்பிள்ளை - பெண் வீட்டார் இருவரும், குடும்பத்துக்குள் சர்க்கரை நோய் ஏதும் இருக்கிறதா என்பதைக் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.

Friday 7 July 2023

யாருக்கெல்லாம் சர்க்கரை நோய் வரும் ?


     நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு  அடிக்கடி வரும் எண்ணம், "உடம்பெல்லாம் அடிக்கடி அசதியாகி விடுகிறது, பாதங்களில் ஒரே எரிச்சல், காலில் காயம் பட்டால் சீக்கிரம் ஆறுவதில்லை, கண்கள் அடிக்கடி இருட்டிக்கொண்டு வருகிறது. எனக்கு சர்க்கரை நோய் இருக்குமோ " என்று தான்.

     சந்தேகமாக இருந்தால், உடனே சர்க்கரை நோயைக் கண்டறியும் பரிசோதனைகளை மேற்கொள்ளுங்கள். ஒருவேளை உங்களுக்குச் சர்க்கரை நோய் இல்லை என்றால், அது வரும் வாய்ப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

      நிறைய இனிப்பு (சர்க்கரை) சாப்பிட்டால் தான் சர்க்கரை நோய் வரும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது தவறு. சர்க்கரையை அதிகம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வராது. புறகு எதை வைத்து எனக்கு சர்க்கரை நோய் வரும் என்பதை அறிந்த்கொள்வது என்கிறீர்களா?

     கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பல ஆராய்ச்சிகள் செய்து, என்னென்ன காரணங்களால் சர்க்கரை நோய் வரும் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். வாழ்க்கை முறை மற்றும் உடல் நலப் பாதிப்புகள் தான் சர்க்கரை நோயை உண்டாக்கும் முக்கியக் காரணிகளாகும்.

 



குடும்பப் பின்னணி

      குடும்பத்தில் உங்கள் தந்தைக்கோ, தாய்க்கோ, தம்பி அல்லது தங்கை போன்ற உடன்பிறப்புகளுக்கோ, ஒன்றுவிட்ட சித்தப்பா, சித்தி, மாமா போன்றவர்களுக்கோ சர்க்கரை நோய் இருந்தால், உங்களுக்கும் சர்க்கரை நோய் வரக்கூடிய  வாய்ப்புகள் இருக்கிறது. பெற்றோர்கள் இருவருக்கும் இருந்தால், உங்களுக்கு கண்டிப்பாக சர்க்கரை நோய் வரும் சாத்தியம் அதிகம் உள்ளது.

 



உடல் எடை

      80 சதவீதத்துக்கும் அதிகமான பேர், உடல் எடை கூடுவதால் இந்த நோய்க்கு இலக்காகிறார்கள். அதிகக் கொழுப்பால், செல்கள் விரிவடைந்துவிடுவதால், போதுமான இன்சுலினை செல்கள் பெற முடியாது. உங்கள் எடை ஒவ்வொரு பவுண்டு அதிகரிக்கும் போது, சுமார் நான்கு சதவீத சர்க்கரை நோய்க்கான வாய்ப்பை நீங்கள் உண்டாக்கிகொள்கிரீர்கள். இன்சுலின் தனது வேலைகளைச் சரியாக செய்யாத வகையில் செல்களில் கொழுப்பு அடைத்துகொள்ளும்.

 



உடல் செயல்பாடு குறைதல்

    நான் ஹவுஸ்வொய்பாக இருக்கிறேன், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிறேன் என்று எந்த வேலையும் செய்யாமல் சொகுசாக வாழ்க்கை நடத்துபவர்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு மிக அதிகம்.

      சம்பெனியில், கூலிக்கு வேலை பார்ப்பவன் வண்டியில் போகிறான். என் அந்தஸ்துக்கு நான் காரில் தான் போவேன். பத்தடி தூரம் நடப்பது கூட என் அந்தஸ்துக்கு செய்யும் அவமரியாதை என்று நினைப்பவர்களுக்கும், காலாற நடக்காதவர்களுக்கும், எந்த வேலையும் பிறர் மீது திணித்துவிட்டு, சாய்வு நாற்காலியில் சாய்ந்து கிடப்பவர்களுக்கு இன்சுலின் சரியாக வேலை செய்யாமல், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து சர்க்கரை நோய் வந்துவிடும்.

 



ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அதிகரிப்பு

      ரத்த அழுத்தம் 140/90-க்கு அதிகமாகவும், கொழுப்பில் டிரைகிளிசரின் அளவு 250மில்லிகிராமுக்கு அதிகமாகவும், எச்.டி.எல் கொழுப்பு 35மில்லிகிராமுக்கு குறைவாகவும் இருந்தால் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

 



வயது

       45 வயது ஆகும்போது, உடலின் செயல்திறன் குறைந்து சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். இருபது வயதிலேயே நாற்பது வயது ஆனவரைப்போல் நடந்துகொள்ளும் நபர்களுக்கும் சர்க்கரை நோய் வரும்.

 



பெண்கள்

      பாளிசிஷ்டிக்  ஓவோரியன் சிண்ட்ரோம் என்ற  நார்க்கழைலை பாதிப்பு உள்ள பெண்கள், கர்ப்பக் காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள், மூன்று கிலோவுக்கு மேல் அதிக எடை கொண்ட குழந்தை பெற்ற பெண்கள், உடல் செயல் திறன் குறைந்த பெண்கள் ஆகியோர் சர்க்கரை நோயை எதிர்பாத்துக் காத்திருக்கலாம்.

 



உடல் பருமன் 

      தைராய்டு பிரச்சனை போன்ற  ஹார்மோன் பாதிப்புகள் மற்றும் உணவு முறை, பரம்பரை போன்றவை காரணமாக உடல் பாரும் அதிகம் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய் வருவதகான வாய்ப்புகள் அதிகம். உயரத்துக்கு ஏற்ற உடல் பருமனும் எடையும் இல்லாமல் கூடுதலாக இருந்தால் சர்க்கரை நோய் வரும். தொப்பை பெரியதாக இருப்பவர்கல்லும் இந்த நோய் வரும் வாய்ப்பு உண்டு.

Wednesday 21 September 2022

புயல்களுக்கு எப்படி மற்றும் யார் பெயர் வைக்கிறார்கள் தெரியுமா ?


       புயல்களுக்கு ஏன் பெயர் வைக்கிறார்கள், எதற்காக வைக்கபடுகிறது, எப்படி வைக்கிறார்கள், யார் வைக்கிறார்கள் என்று தெரியுமா. ஒவ்வொரு ஆண்டிலும், ஒன்றுக்கு மேற்பட்ட புயல்கள் இந்தியாவில் உருவாகுகிறது. அவை உருவான நாள், மாதம், ஆண்டு, இடம் ஆகியவற்றை மட்டும் தெரிவிக்கும் போது பல்வேறு குழப்பங்கள் ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக தான் புயல்களுக்கு பெயர்கள் வைக்கபடுகின்றது. 

 

      வானிலை மற்றும் காலநிலையை ஆய்வு செய்யும் அறிவியலாளர்கள், பேரிடர் நிர்வாகத்தினர், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என அனைவருக்கும் இம்முறை உதவியாக உள்ளது. ஒரு புயலை அடையாளம் காணுதல், உருவாகும் விதத்தை அறிவது, எளிதாக நினைவில் கொள்வது, விரைவாக எச்சரிக்ககளை வழங்குவது என பலவற்றிற்கும் இது உதவிகரமாக உள்ளது. 

 

      பொதுவாக வெப்பமண்டல கடல் பகுதிகளில் புயல்கள் அதிகமாக உருவாகுகின்றன. அவற்றின் சீற்றம் அவை உருவாகும் இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன. தென்பசுபிக் இந்திய பெருங்கடல் ஆகிய பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றத்திற்கு புயல் என்றும் வடக்கு அட்லாண்டிக், மத்திய வடக்கு பசுபிக், கிழக்கு வடக்கு பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் ஏற்படும் கடல் சீற்றம் சூறாவளி என்றும், வடமேற்கு பசுபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றம் கடும் புயல் என்றும் உலக வானிலையாளர்களால் கூறபடுகிறது.

 


      புயல் மையம் கொண்ட வானியல் ரீதியான புள்ளி விவரங்கள், தொழில்நுட்பம், வேகம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அது எந்த மாதிரியான புயல் என்று குறிபிட்டார்கள். இதை குறிபிடுவதும் ஆவணபடுத்துவம் சிரமமாக இருந்தது. அதன் பின்னர் தான் புயலுக்கு தனித்த பெயரிடும் வழக்கம் தோன்றியது. இவ்வழக்கம் உலக அளவில் பல்லாண்டுக்கு முன்பே தோன்றிவிட்டது. தொடக்கத்தில் பெண்களின் பெயர்களை புயலுக்கு சூட்டினர். அதன் பின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ஆண்கள் பெயர்களும் வைக்கப்பட்டன. 1873 ல் நிறுவப்பட்ட பன்னாட்டு வானிலை அமைப்பு உலக வானிலை அமைப்பு என்ற பெயர் மாற்றத்துடன், சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் 1950 முதல் செயல்பட்டு வருகிறது. 

 

      இதில் உலகின் 187 நாடுகள் மற்றும் 6 பிரதேசங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆப்பிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா, வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா, கரிபியன், தென்மேற்கு பசுபிக், ஐரோப்பா, ஆகிய ஆறு வானிலை மண்டலங்களை இந்த அமைப்பு ஒருங்கிணைகிறது. ஒவ்வொரு மண்டலத்திலும் உருவாகும் புயல்களுக்கு அப்பகுதி நாடுகள் ஓன்று சேர்ந்து பெயர் வைத்து அதை உலக வானிலை நிறுவனமும், ஆசியா, பசுபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் ஆகியன அங்கீகாரம் அளித்து பட்டியலை இறுதி செய்கிறது. டெல்லி இந்திய வானிலை ஆராய்ச்சி துறை மண்டல அளவிலான, வானிலை மையங்களில் ஒன்றாக திகழ்கின்றது.

 


      1970 ல் ஜெனிவாவில் நடைபற்ற மாநாட்டில் பசுபிக் கடல்களில் உருவாகும் கடல்களுக்கு பெயர் வைக்கும்படி, அந்த பகுதியை சேர்ந்த நாடுகளை உலக வானிலை அமைப்பு முதல் முறையாக கேட்டு கொண்டது. புயலுக்கு பெயரிட சில விதிமுறைகளும், நிபந்தனைகளும் உள்ளன. புயல் பெயர்களில் அரசியல், அரசியல்வாதிகள், கலாச்சாரம், மத நம்பிக்கைகள், இனம் ஆகியவை இருக்க கூடாது. உலக அளவில் வாழும் மக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் படி இருக்க கூடாது. மிக கொடூரமான பெயர் தவிர்க்கப்பட வேண்டும். பெயர் சிறியதாகவும் உச்சரிக்க எளிதாகவும் இருக்க வேண்டும். பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும். அவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை பெயரிட்ட நாடுகள் குறிபிட வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய பெயரை மீண்டும் பயன்படுத்த முடியாது. 

 

      இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மட்டும் இதுவரை 169 பெயர்களை பரிந்துரை செய்துள்ளது. பெயர் புயலுக்கு சூட்டபடும் முன் குழு நாடுகளின் அனுமதி பெற வேண்டும். அதெல்லாம் சரி இந்த பெயர்களை யார் வைக்கிறார்கள் என்று கேட்குறீர்களா. இதுவரை பரிந்துரை செய்யப்பட்டு தேர்வு செய்து சூட்டப்பட்ட பல பெயர்கள் பொது மக்களாக சூட்டியது தான். நீங்கள் கூட உங்களுக்கு பிடித்த பெயரை வானிலை ஆராய்ச்சி மைய்யத்துக்கு அனுப்பி வைக்கலாம். ஒருவேளை அடுத்து வரும் புயலுக்கு நீங்கள் பரிந்துரை செய்த பெயரை சூட்டுவதற்கு வாய்ப்பும் உள்ளது.

Monday 15 August 2022

எவ்வளவு மதுபானம் அருந்தினால் சட்டப்படி வாகனத்தை இயக்கலாம்

 

      MOTOR VEHICLE ACT 1988 - SECTION 185, 202 சட்டப்படி வாகனம் செலுத்தும் போது, நமது 100மில்லிகிராம் ரத்தத்தில் 30mg ஆல்ககால் இருந்தாலே, காவல் துறை எந்தவித வாரண்டும் இல்லாமல் அரஸ்ட் செய்யலாம். அது மட்டும் இல்லாமல் ஆல்ககால் டெஸ்ட் எடுக்க வலியுறுத்தும் போது, நாம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், காவல்துறை நம்மை அரஸ்ட் செய்யும். நாம் மது அருந்தியது உறுதி செய்யும் பட்சத்தில் முதல் முறைக்காக ரூபாய் 10,000 அபராதமும் மற்றும் அல்லது 6 மாதங்கள் சிறை தண்டனையும் கிடைக்கும். அதே குற்றத்திற்காக மீண்டும் பிடிபட்டால் 2 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் அல்லது ரூபாய் 15,000 அபராத தொகையாக பெறப்படும்.

 

      SECTION 128ன் படி TRAFFIC போலீஸ் நமது வாகனத்தின் சாவியை எடுத்தாலும் அது சட்டபடி குற்றமாகும். அப்படி சாவியை எடுத்தும் செல்லும் அதிகாரி மீது வழக்கு தொடரவும் நமக்கு முழு உரிமை உள்ளது.

 


      2006 ஆண்டு அறிமுகபடுத்தபட்ட AUTOMOTIVE AMENDMENT BILL - 2006 -ன் படி, தலைகவசம் அணியாமல் சென்றதற்காக அவதாரம் செலுத்தி இருந்தாலோ, அல்லது வேற எதாவது ஒரு காரணத்திற்காக அவதாரம் செலுத்தி இருந்தாலோ, மீண்டும் அதே நாளில் அதே காரணத்திற்காக அவதாரம் செலுத்த தேவையில்லை.

Wednesday 10 August 2022

இந்த வருடங்களுக்கு முன் திருமணம் செய்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லையா ?


       1956-ல் இந்து வாரிசு உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தமும் செய்யப்பட்டது. 

 

      அதன்படி கடந்த 25.03.1989 க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வ சொத்தில் பாக பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்விக சொத்தில் பாக பிரிவினை கோர உரிமை உண்டு. ஆனால், சொத்து பாகப்பிரிவினை 25.03.1989 க்கு முன்பு செய்யபட்டிருந்தால் அந்த சொத்திலும் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 

 


      இது தொடர்பாக டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், "இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்கள் அந்த சொத்திலும் உரிமை கோர முடியாது" என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

      இதை தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2015 மற்றும் 2018-ல் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான கேள்விகள் எழுந்தது. 

 

      இதற்கிடையே டெல்லி உச்ச நீதிமன்றம் தீருப்புக்கு எதிராக சுப்ரீம்கோர்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நாசர், மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 


      அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களை போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது. "ஒரு இந்து குடும்பத்தில் அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம் - 2005 திருத்ததிற்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு." என்று தீர்ப்பு வழங்கினர்.. 

 

ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது.