Saturday 23 May 2015

மிதக்கும் பிரமாண்ட சூரியசக்தி மின்நிலையங்கள்


      ஜப்பான் நாட்டின் காட்டோ நகரில் உள்ள நிஷிஹிரா, ஹிகாஷிஹிரா ஆகிய நீர்நிலைகளில் இரண்டு பிரமாண்ட சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.

       இரு நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த இரண்டு மின் உற்பத்தி நிலையங்களில் இருந்தும் 3,3௦௦ மெகா வாட் மின்சக்தியை உற்பத்தி செய்ய மிடியும். இதன் மூலம் சுமார் 92௦ வீடுகளுக்கு மின்சக்தியை வழங்கத் தீர்மானிக்கப்படுள்ளது.

         கடந்த 2011-ம் ஆண்டு புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட விபத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டதால், தடையற்ற மின் சக்தியைப் பெரும் நோக்கில் இந்த மிதக்கும் சூரியசக்தி மின் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment