Thursday 14 May 2015

வாசனை திரவியங்களை பற்றி


                   சில வாசனைத் திரவியங்கள் அதிக வாசனை கொண்டவையாக உள்ளன. பலருக்கு அந்த வாசனை பிடிக்காமல் தலை சுற்றல், தலை வலி போன்றவை இருக்கும். அப்படியான வாசனைத் திரவியங்களை தவிர்த்து எல்லோரும் விரும்பத் தக்க வாசனை திரவியங்களை உபயோகித்தல் நல்லது.

                       பழங்கலத்தில் இருந்தே உலகமெங்கும் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்தபட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதன்முதலில் வாசனைத் திரவியங்களை பயன் படுத்திய பெருமை எகிப்தையே சேரும். ஒரு களத்தில் அரசர்கள், பெரும் மதிப்புக்கு உரியவர்கள் மட்டுமே வாசனைத் திரவியங்களை உபோயோகித்து வந்தனர்.

                        பொது வைபவங்கள், விழாக்களுக்கு செல்லும் போது மட்டும் தான் வாசனைத் திரவியங்கள் பயன்படுத்த வேண்டும் என்று கிடையாது.இன்னார் தான் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடும் கிடையாது.

        சிலர் எளிதில் தூங்குவதற்காக இரவில் தூங்குவதற்கு முன் மென்மையான வாசனை வீசும் திரவியங்களை பூசிக் கொள்வர். பொதுவாக வாசனைத் திரவியங்கள் ஒருவித் வசீகரமான சூழ்நிலையை ஏற்பத்துகின்றன. இதனால் தாழ்வு மனப்பான்மை இல்லாமல் சந்தோஷமாக வெளியில் சுற்ற முடிகிறது. பலர் இருக்கக் கூடிய இடத்தில் உங்களை தனித்தன்மை வாய்ந்தவராக காட்டுகின்றது. தன்னம்பிக்கையுடன் செயல்பட முடிகிறது.

      வெயில் காலத்தில் லேசான வாசனைத் திரவியங்களையும், குளிர்கலங்களில் அதிக வாசனை தரக்கூடிய திரவியங்களையும் பயன்படுத்த வேண்டும். இயற்கையான நறுமண பொருட்களில் மட்டுமின்றி, கெமிக்கல்ஸ், ஆயில், ஆல்கஹால் போன்றவற்றில் இருந்தும் வாசனைத் திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன.

                      உடலில் பூசிகொல்பவை, உடையில் பூசிக்கொல்பவை என இரண்டு விதமான வாசனை திரவியங்கள் உள்ளன. அதில் உங்களுக்கு எது உகந்ததோ அதைத் தேர்ந்தெடுப்பது நல்லது. உடலில் பூசும் வகையிலான வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும் பொது அலர்ஜியை ஏற்படுத்தாத வாசனைத் திரவியங்களாக பார்த்து பயன்படுத்த வேண்டும்.

               மல்லிகையில் இருந்து தயாரிக்கும் வாசனை திரவியம் மல்லிகையின் மனம் கொண்டதாக அமையும். விதவிதமான வாசனைகளில், நிறங்களில் வாசனைத் திரவியங்கள் கிடைக்கின்றன. ஆண்கள், பெண்கள் இருவருமே தங்களது எதிர்பாளினர்களைக் கவருவதற்காக வாசனைத் திரவியங்களை பயன்படுத்துகின்றனர்.

             வாசனைத் திரவியங்களை வாங்கும் முன், மணிக்கட்டின் மீது சிறிதளவு தெளித்துபாருங்கள். சிறிது நேரம் கழித்து அலர்ஜி எதுவும் ஏற்படவில்லை என்றால், அதை வாங்கலாம். அலர்ஜி ஏற்படும் பட்சத்தில் வேறொன்றை பரிசோதிப்பது நல்லது.

வாசனைத் திரவியங்களை பயன்படுத்தும் போது தலை முடியில் படாதவாறு பயன்படுத்த வேண்டும். சிறிதளவு தெளிக்க வேண்டுமே தவிர அதிகம் தெளிக்க கூடாது. வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நாடுகளில் பிரபலமானது பிரான்ஸ் தான்.

No comments:

Post a Comment