Thursday 14 May 2015

ஊறுகாய் உஷார்.....


           நமது உணவுகளில், இட்லியை மிகச் சிறந்தது என சொல்லும் உணவியல் நிபுணர்கள், ஊறுகாயை மோசமானது என்கிறார்கள். ஏன் தெரியுமா? உணவை சுருசுருப்பாக அனுபினாலும், ஊறுகாய் ஏற்படுத்தகூடிய வேண்டத்தகாத விளைவுகள் தான் காரணம்.

                   சிலருக்கு ஊறுகாய் இல்லாமல் சாப்பாடு இறங்காது. "மாதா ஊட்டாத உணவை மாவடு ஊட்டும்" என்பார்கள். ஆனால் ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுவதால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஊறுகாயை தொடர்ந்து, அளவின்றி சாப்பிடுவதால் பின்வரும் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்... ஜாக்கிரதை!

ரத்த அழுத்தம்
           உணவோடு ஊறுகாயை அதிகமாக சேர்த்து சாப்பிடும் போது, ரத்த அழுத்தம் அதிகரிக்கும். பொதுவாக ரத்தக் கொதிப்பு உள்ளவர்களில் சிலர் இந்தப் பிரச்சினை எதிர்கொண்டிருப்பர்கள்.

சிறுநீரக பாதிப்பு
               ஊறுகாயை அதிகம் சேர்த்து கொள்வதால், சிறுநீரகத்தின் வேலைப் பளு அதிகரிக்கிறது. எதனால் சிறுநீரகத்தின் செயல்திறனில் குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

புற்று நோய்
    வர்த்தகரீதியில் பெருமளவில் தயாரிக்கப்படும் ஊறுகாயில் சுவைக்காகவும், பதபடுத்துவதர்க்காகவும். பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் புற்று நோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும். ஊர் ஆய்வு கூறும் முடிவு இது.

வயிற்ற்றுப் புண்
          அதிகமாக ஊறுகாய் சாப்பிடுபவர்களுக்கு முதல் பக்கவிளைவாக வாயிற்றுப் புண் ஏற்பட கூடும். அப்போதும் தொடர்ந்து ஊறுகாய் சாப்பிட்டால், மேலும் தீவிரமான பாதிப்புகள் உண்டாகலாம்.

வந்தி உணர்வு
           அதிகமாக உணவு சாப்பிட்ட பின்னர் பருக்கும் குமட்டல் போன்ற உணர்வு ஏற்பட்டிருக்கும். அனால், இதற்கு ஊறுகாய் தான் காரணம் என்று அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. தொடர்ந்து சாப்பாட்டோடு சேர்த்து அதிகமாக ஊறுகாயும் சாப்பிடும் போது இது போன்ற குமட்டல், வந்தி உணர்வு ஏற்படலாம்.

மன அழுத்தம்
                    ஊறுகாயை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு கோபம், மன அழுத்தம் ஆகியவை அதிகமாக ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொற்று நோய்
             ஊறுகாய் அதிகம் சாபிடுபவர்களுக்கு மற்றவர்களை விட எளிதாக நோய் தொற்று ஏற்படக் கூடும்.


செரிமானப் பிரச்சினை
       ஊறுகாயை விரும்பிச் சாப்பிடுவதால் செரிமானப் பிரச்சினைகள் ஏற்படலாம். ஊறுகாய் மட்டுமல்ல, எந்த ஓர் உணவையும் அளவுக்கு மீறி அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும்.
                  ஊறுகாய் கேட்டுப் போகாமல் பதப்படுத்துவதற்காக அதில் அதிகமாக பயன்படுத்தப்படும் உப்பு , காராம் தான் மேற்கண்ட பிரச்சினைகளுக்குக் காரணம். கடைகளில் பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனிகளிலும் ஏதே பிரச்சினை உள்ளது.
         "அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு" என்றவர்கள் நமது முன்னோர்கள். அமுதத்துக்கே அப்படி என்றால், ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?
ஊறுகாயை எப்போதாவது "தொட்டுக் கொள்ள" மட்டும் செய்தல் மேற்கண்ட பிரச்சனைகளை தவிர்த்துவிடலாம்!...

No comments:

Post a Comment