Tuesday 9 June 2015

எண்ணை தேய்த்துக் குளித்தல் எதற்காக?


     எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம் என்று விதிக்கப்பட்டுள்ளது. இதயத் தூய்மையுடன் உடல்தூய்மையும் மிக முக்கியமாக நம் மூதாதையர் கடை பிடித்திருந்தனர். நம் நாட்டில் காலைக் கடமைகளில் எண்ணை பூசிக்குளித்தல் முக்கியமான இடம் பெற்றுள்ளது. அடி முதல் முடிவரை நாற்றாக எண்ணை தேய்த்து மூழ்கிக் குளிப்பது நம் முன்னோர்கள் ஒரு சுவர்க்கிய சுகமாகக் கருதியிருந்தனர்.

     ஆனால் எண்ணை தேய்த்துத் குளிப்பதில் வேறு நன்மைகள் எதுவும் உள்ளதாக அனேகர் அறிந்ததில்லை. உடலுக்கு மேலாகக் கிடைக்கப் பெறும் சுக அனுபவத்தையே எண்ணி எண்ணை தேய்த்துக் குளிக்கின்றனர். இதைவிட முக்கியமான இரண்டு விஷயங்கள் பெரும் பயனளிக்கின்றன. ஒன்றாவதாக எண்ணையில் சேர்க்கப்படும் மூலிகைகளின் மருத்துவ குணங்கள் உடலில் பரவுகின்றன. மேலும் முக்கியமாக, சருமத்தின் மேல் பரப்பில் வாழும் கண்ணுக்குத் தெரியாத நோயனுக்கள், எண்ணை பூசியதும் வாயு கிடைக்கப்பெறாமல் அளிந்து போகின்றன.

No comments:

Post a Comment