Friday 7 April 2017

பெண்களை பற்றி பெண்களுக்கே தெரியாத ரகசியம்



   மனித இனம் மட்டுமின்றி உலகில் தோன்றிய அனைத்து இனங்களிலும் விருச்சமாக இருந்து வருவது பெண் பாலினம் தான். பெண் பாலினம் இன்றி ஒரு இனத்தின் விருத்தி சாத்தியமற்றது, அனைத்து உயிரினங்களின் அடிபடையும் இனவிருத்தி தான். ஆனால் மனித இனத்தில் மட்டுமே அதையும் தாண்டி அன்பும், பாசத்திற்குமான அடையாளமாக இருக்கிறார்கள் பெண்கள். பாசத்திற்கான அடைமொழியாக திகழ்வது அம்மா என்ற சொல் மட்டுமே. ஒவ்வொரு ஆணின் வெற்றி, தோல்வி, மற்றும் இன்பத்திற்கு பின் உறுதுணையாக அம்மா, அக்கா, மனைவி, காதலி, தோழி என்ற ஒரு பெண்ணின் துணை இருக்கத்தான் செய்கிறது.
   ஆண்களின் பலத்திற்கு உறுதுணையாக இருக்கும் பெண்களின் உடல், மனம், சார்ந்த விசயங்கள் பெண்களுக்கே தெரியாத சில விசயங்கள் உங்களுக்காக.
   சுமாராக ஒரு நாளுக்கு ஒரு பெண் 2௦,௦௦௦ வார்த்தைகள் பேசுகிறாள். இது ஆண்களை விட 7௦௦௦ வார்த்தைகள் அதிகம். ரஷ்யாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம். ஏறத்தாழ 9 மில்லியன் பெண்கள் ஆண்களை விட அதிகமாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
   அமெரிக்காவில் பிறக்கும் 40 சதவித குழந்தைகள் திருமணம் ஆகாத பெண்களுக்கு தான் பிறக்கிறது என ஒரு சர்வே கணக்கு கூறுகிறது. சராசரியாக பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருவருடத்தை என்ன ஆடை அணியலாம் என சிந்தனையிலும், ஆடையை தேர்ந்தெடுபதிலும் செலவு செய்கின்றனர். ஒரு பெண் ஒருவருடத்தில் சராசரியாக 30 முதல் 64 முறை அழுகிறாள். ஒரு ஆண் சராசரியாக ஒருவருடத்திற்கு 6 முதல் 17 முறை அழுகிறான். ஆண்களை விட அதிகமாக பொய் கூறும் திறன் கொண்டவர்கள் பெண்கள்.
   ஆண்களின் இதய துடிப்பை விட பெண்களின் இதயம் சற்று கூடத்தான் துடிக்கிறது இது பெரும்பாலும் அறிந்த ஒன்றுதான். பெண்களின் வாழ்நாளில் ஏறத்தாள 4 வருடங்கள் மாதவீடாயில் கழிகிறது. ஆண்களைவிட ருசி உணர்வு கொண்டவர்கள் பெண்கள். ஏனெனில் ஆண்களை விட ருசி உணர்வை அறியும், நாக்கில் உள்ள மொட்டுக்கள் பெண்களுக்கு அதிகம். உடலுறவில் ஈடுபட்டு 4 அல்லது 5 நாட்களில் கருதரிக்கின்றனர் பெண்கள். ஓர் பெண் சராசரியாக ஒரு நாளுக்கு நான்கில் இருந்து ஒன்பது முறை தங்களது தோற்றத்தை பற்றி எண்ணுகிறார்கள்.
   பெண்களை கொள்ளும் கொடிய நோயாக இருப்பது இதய பிரச்சனைகள் தான் உலகெங்கிலும் பெண்கள் அதிகமாக மரணம் அடைய இதய கோளாறுகள் தான் காரணமாக அமைகிறது. மல்டி டாஸ்கிங்-கில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்தவர்கள். நூற்றில் 2 சதவீத பெண்கள் தங்களது அழகை பற்றியும் தாங்கள் தான் அழகு என்றும் சுய புராணம் பாடி கொள்கிறார்கள்.

No comments:

Post a Comment