Monday 2 October 2017

தாயத்தில் அடங்கி இருக்கும் மிகப்பெரிய அறிவியல் உண்மை

    சமீபகாலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால், உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்ளை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்ற ஒரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன் வைக்கபடுகிறது. அப்படி அவர்கள் தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது.
 
    தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்கப்பட வேண்டும் என்றால், குழந்தை வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர், எய்ட்ஸ், போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் கூட இந்த தொப்புல்கொடிகளில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணபடுத்தி விடமுடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே, பைசா செலவு இல்லாமல் நம் முன்னோர்கள் சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்பமுடிகிறதா. உணமைதான் இது போன்ற நடைமுறைகள் இன்றும் முழுமையாக அறியாமல் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
    அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள் கோடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ இந்த தாயத்தை கட்டிவிடுவார்கள். அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்குபிளிந்து சிலநாட்கள் அதை நன்றாக காயவைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டிவிடுவார்கள்.
     அந்த குழந்தை வளர்ந்து பெரிய மனிதராக ஆன பிறகு, ஏதேனும் கொடிய நோய் தாக்கினால், வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பொடியை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் மறைந்துவிடும். இன்றளவும் இந்த தொப்புள்கொடி பழக்கம் சில வீடுகளில் உண்டு. பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.
   இவ்வளவு தெளிவான நம்முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று பதியவைத்து தாயத்தெல்லாம் நாகரிகாமானது அல்ல அதை கட்டுவதால் எந்த பயனும் இல்லை என்று சொல்லி, நம்மளையெல்லாம் முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் திறப்பி என்றொரு பெயரைவைத்து அதனை நமக்கே விற்கின்றனர். இனியாவது விழிப்போம் நம் முன்னோர்களின் அறிவியலை தோண்டி எடுப்போம்.

No comments:

Post a Comment