Tuesday 24 April 2018

இந்தியாவில் உள்ள சாலை கொலையாளிகள்


    உலகிலேயே மோசமான டிரைவர் இருப்பது இந்தியாவில் தான் என்கிறது, ஒரு ஆய்வு. உலகிலேயே அதிக வாகன விபத்துக்கள் நடப்பதும் இங்கு தான். இதற்கு முதமையான காரணம் குடிபோதையில் மிதக்கும் டிரைவர்கள். அதற்கடுத்த காரணம் முறையான ஓட்டுனர் பயிற்சியின்மை. மூன்றாவது டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதில் உள்ள குளறுபடிகள்.

 உலகிலேயே அதிக சாலை கொலைகள் இந்தியாவில் தான் நடைபெறுகின்றன. சாலை கொலையாளிகள் இருக்கும் நாடு இது என்கிறது, அந்த ஆய்வு.

       இந்தியாவில் வெறும் 1.25 கோடி வாகனகளே உள்ளன. இவை வருடத்துக்கு ஒரு லட்சத்து 14 ஆயிரம் மரணங்களை ஏற்படுத்துகின்றன. ஆனால் 25 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் இருக்கும் அமெரிக்காவில் வருடத்துக்கு 41 ஆயிரம் மரணகளே ஏற்படுகின்றன.

  இந்தியாவை பொறுத்தவரை 1௦௦ கார்களுக்கு ஒரு சாலை மரணம் ஏற்படுகிறது. அமெரிக்காவிலோ 5 ஆயிரம் கார்களுக்கு ஒரு மரணமே ஏற்படுகிறது.

  ஏன் இந்த வித்தியாசம்? அமெரிக்கர்கள் குடிப்பதில்லையா? அவர்கள் வேகமாக வண்டிகளை ஓட்டுவதில்லையா என்று கேட்கலாம். வளரும் நாடுகளில் வாகனங்களின் சரசாரி வேக வரம்பே இந்தியாவை விட அதிகம். அமேரிக்கா போன்ற நாடுகளில் தான் 3௦௦ கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வாகனங்களும், சாலைகளும் உள்ளன. ஆனால் எப்படி அவர்கள் தொடர்ந்து விபத்துகளை கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்?

  அமெரிக்காவில் சாதாரண டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கே கடுமையான விதிமுறைகளும், வழிகாட்டுதல்களும் உள்ளன. இளைஞர்கள் லைசென்ஸ் பெற்ற முதல் ஆண்டு வாகன ஓட்டுதலில் தான் நிறைய விபத்துக்களை சந்திக்கிறார்கள். இதை தெளிவாக கணித்த வளர்ந்த நாடுகள், அந்த காலகட்டத்தில் தனியாக வாகனங்களை ஓட்டுவதற்கு தடை விதித்து சட்டங்களை இயற்றி உள்ளன. அனுபவம் வாய்ந்த டிரைவர்களை கூடவே வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் பைக் என்றால் 125 சிசிக்கு மேல் ஓட்டுவதற்கு லைசென்ஸ் கொடுப்பதில்லை.

  சாலை மரணங்களை குறைப்பதற்கு பல நாடுகள் கோடிக்கணக்கில் செலவழிக்கின்றன. ஆலகஹால் சென்சார் கருவிகள், சீட் பெல்ட், அலாரனகுள், ஆட்டோமேடிக் ஸ்பீட் கண்ட்ரோல் போன்றவற்ரை கண்டுபிடித்து வருகின்றன.

    பத்து ஆண்டுகளில் சாலை மரணங்களை 2௦ சதவீதமாக குறைக்க வேண்டும் என்று அமேரிக்கா முடிவு செய்திருக்கிறது இங்கிலாந்து 4௦ சதவீதத்தை இலக்காக வைத்திருகின்றன. மலேசிய போன்ற நாடுகள் கூட 1௦ ஆயிரம் வாகனங்களுக்கு மூன்று விபத்துகளாக குறைப்பதில் உறிதியுடன் உள்ளன. சுவீடன் போன்ற நாடுகளில் சாலை மரணம் 1997-ல் இருந்து பூஜ்ஜியமாக இருக்கிறது. அங்கு விபத்தால் ஒரு மரணம் கூட நிகழவில்லை. அதனால் சாலை விபத்துக்கள் தடுக்க கூடிய ஒன்றே.

 குடிபோதை இல்லாமல், சிறந்த திறமைமிக்க டிரைவர்கள் தங்கள் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டில் வைத்திருந்தால், தற்கொலை செய்ய விரும்பி வாகனம் முன்விழும் நபரை கூட காப்பாற்ற முடியும். உலகின் மோசமான டிரைவர்கள் என்ற பெயரை இந்திய டிரைவர்கள் உடைக்கவும் முடியும். சாலை விபத்துகளில் உலகில் முதல் நாடாக இருக்கும் இந்தியாவை பின்னுக்கு தள்ளவும் முடியும்.

விபத்துகள் நடப்பதில்லை நாம் தான உருவாக்குகிறோம்.

No comments:

Post a Comment