Wednesday 13 June 2018

மரணத்திற்கு பின் 3 நிமிடம் உயிர் வாழும் மனிதர்கள்


   மனிதனுடைய மரணத்திற்கு பிறகு 3 நிமிடங்கள் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை பற்றிதான் ப்பொழுது நாம் பார்க்கபோகிறோம். மனிதனின் மரணத்திற்கு பின் அவனுடைய நினைவுகள் 3 நிமிடங்கள் வரை இருக்கும் என சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

    மனிதன் மரணத்தின் போது மூளையின் செயல்பாடு அடங்கிய 20 முதல் 30 வினாடிகளில் இதய துடிப்பும் நின்று விடும். அதன்பிறகு எதையும் உணர முடியாது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். னால் மனிதன் இறந்த பிறகும் அவன் உயிர் வாழ்கிறான் என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது மனிதனின் மரணத்திற்கு பிறகு மூன்று நிமிடங்கள் அவனது நினைவுகள் இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

   இந்த நினைவுகள் ஒருவரை மரணத்தில் இருந்தும் கூட எழுப்பிவிட வாய்ப்பு உள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு கடந்த 4 ஆண்டுகளாக இது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன்படி இருதய துடிப்பு அடங்கிய உடன் அதில் இருந்து மீண்டும் உயிர் பிளைத்த 40 சதவீதம் நபர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்பொழுது இருதய துடிப்பு அடங்கிய பிறகு 3 நிமிடங்கள் தங்களது நினைவலைகள் மற்றும் என்ன ஓட்டங்கள் இருந்ததாகவும் அதுவே நாங்கள் மீண்டும் உயிர் பிழைக்க காரணமாக அமைந்தது எனவும் கூறுகின்றனர்.

   நியூயார்க் பல்கலைகழக உதவி பேராசிரியரும் சவுத்தாம்டன் பல்கலைக்கழ முன்னாள் ஆராய்ச்சியாளருமான டாகடர் சாம்பர்னியா தனது ஆய்வு அனுபத்தை தெரிவித்துள்ளார். மரணத்தின் விளிம்புக்கு சென்று திரும்பியவர்கள் தங்களுக்கு மாயத்தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர் என்றார்.

No comments:

Post a Comment