Friday 29 June 2018

சிசேரியன் பற்றிய சில உண்மைகள்


    பிரசவ நேரத்தில் பிரச்சனை எழுகிறதோ இல்லையோ, மருத்துவர்கள் கூறும் ஒரு வார்த்தைக்கு பயந்து, வேணாங்க சிசேரியன் பண்ணிடலாம் என்று கவுண்டரில் பணத்தை கட்டி நிம்மதியாக இருக்கும் மக்களுக்கு ஒரு தகவல்.



    சிசேரியன் உயிருக்கு ஆபத்து இல்லை என கருதி சுகபிரசவம் என்ற வார்த்தையை அறிதாக கேட்கும் வண்ணம் உருவாகிவிட்டனர். ஆனால் நேர்மையான மருத்துவர்களோ சிசேரியன் வழி குறைவாக இருப்பினும் பிரசவத்திற்கு பிறகு அதிக படியான செலவும், உடல் உபாதைகளும் இருக்கும் என்று கூறுகின்றனர்.


    நாற்பது வருடங்களுக்கு முன்பு 20 குழந்தைகளுக்கு 1 குழந்தைதான் சிசேரியன் மூலம் பிறந்தது. ஆனால் இன்று மூன்றில் ஒரு குழந்தை 1 சிசேரியன் மூலம் பிரசவம் செய்யப்படுகிறது. உலகிலேயே, பிரேசில் மற்றும் சீனாவில் தான் அதிக அளவில் சிசேரியன் முறையில் குழந்தைகள் பிறகின்றன. பிரேசிலில் 80 சதவீதம், சீனாவில் 50 சதவீதம்.


    சுகபிரசவத்தை விட சிசேரியன் எளிமையாக இருக்கும். வலியும் குறைவாக இருக்கும் என பலர் எண்ணுகின்றனர். ஆனால் சிசேரியன் செய்யும் போதும் தான் தொற்று, ரத்தம் கட்டுதல், கட்டிகள் உருவாதல், ரத்தபோக்கு அதிகமாதல் என நிறைய பிரச்சினைகள் ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆரம்பகால கட்டத்தில் மிகவும் முடியாத நிலைமை, குழந்தையால் தாய்க்கு பிரச்சினை என்றால் மட்டும்தான் சிசேரியன் செய்தனர். இதற்காக தான் இந்த முறை கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது சிசேரியன் செய்வது சர்வசாதரணமாக ஆகிவிட்டது. இதைதான் அனைவரும் விரும்புகின்றனர்.


    சுகபிரசத்தை விட சிசேரியன் முறையில் ஏற்படும் மருத்துவ செலவை ஒப்பிடுகையில் மருத்துவ செலவுகளில் இருந்து மருத்துவமனை செலவு வரை, சிசேரியனுக்கு தான் அதிகமான செலவு ஏற்படுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.

No comments:

Post a Comment