Monday 2 July 2018

மொட்டை போடுவதில் ஒழிந்து இருக்கும் அறிவியல் உண்மை


   தமிழனின் கலாச்சாரமானது பல்லாயிரம் காலத்துக்கு முற்பட்ட கலாச்சாரம் என்பது உலகறிந்த உண்மை. நமக்காக நம் முன்னோர்கள் வகுத்து தந்த வாழ்க்கை முறை என்பது சாதரணமாக ஏனோதானோ என்று வகுக்கப்பட்டது அல்ல. பல்வேறு ஆராய்சிக்கு பின்னர்தான் அதை வகுத்துள்ளனர். அத்தகைய வாழ்க்கைமுறையை மக்கள் பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே அவர்கள் கடவுளை முன்னிறுத்தி ஒவ்வொரு செயலையும் செய்ய தூண்டி உள்ளனர். அதில் ஓன்று தான் குழந்தைகளுக்கு  நாம் மொட்டை அடிப்பதும்.
   தமிழ் நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் இதை குலதெய்வத்திற்காக செய்யப்படும் நேர்த்திக்கடன் என்றும் குடும்ப வழக்கம் என்றும் நினைத்து கொண்டு உள்ளனர். ஆனால் இப்படி மொட்டை அடிப்பதற்கு பின்னால் ஒரு அறிவியல் உண்மையே புதைந்து கிடக்கிறது.
   ஒரு குழந்தை தன் தாயின் கருவறைக்குள் இருக்கும் போது குழந்தையை ஒரு விதமான திரவம் சூழ்ந்து கொண்டு இருக்கும். அதைதான் நாம் பனி குடம் என்கிறோம். ஒரு கருவானது சில மாதங்களில் நன்கு வளர்ச்சி பெற்று சிறுநீர் கழிக்க ஆரம்பிக்கும். அந்த சிறுநீரானது பனிக்குடத்தில் திரவத்தோடு கலந்து விடும். இப்படி பட்ட திரவத்தில் ஒரு குழந்தை 10 மாதமாக ஊறி இருக்கும். அந்த குழந்தை இந்த பூமியில் பிறந்த உடன் அதன் உடலை நன்றாக துடைத்து சுத்தம் செய்து அந்த திரவத்தை நீக்கி விடுவோம். ஒருவேளை கருவறையில் இருக்கும்போதே குழந்தை அதை குடித்து இருந்தால் அதன் உடல் தானாகவே அந்த திரவத்தை வெளியேற்றி விடும்.
   இதில் சிக்கல் என்னவென்றால் குழந்தையின் தலையானது அந்த திரவத்தில் 10 மாதம் ஊறி இருக்கும். ஆகையால் அது அவ்வளவு எளிதில் வெளியில் வர வாய்ப்பு இல்லை. அந்த கழிவுகள் வெளியே வர ஒரே வழி மயிர்கால்கள் மட்டுமே. அதனால் குழந்தை பிறந்த சில மாதங்களில் மொட்டை அடிக்க சொல்லி நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். அப்படி மொட்டை அடிப்பதனால் அந்த கழிவானது மயிர்கால்களின் வழியாக எளிதில் வெளியேறிவிடும்.
   ஒருவேளை குறிப்பிட்ட காலத்துக்குள் மொட்டை அடிக்காவிட்டால் அந்த கழிவுகள் உள்ளேயே தங்கி அது பிற்காலத்தில், தலைவலி, ஒற்றரை தலைவலி மற்றும் தலை சம்மந்தமான நோய்களுக்கு வழிவகுக்கும்.
  
   ஒரு சிலர் தங்களது குழந்தைக்கு 3-வது வயதில் ஒரு மொட்டை அடிப்பார்கள். அதற்கான காரணம் முதல் மொட்டையில் சில கழிவுகள் வெளியேறாமல் இருந்தால் இரண்டாவது மொட்டையில் அது வெளியேறிவிடும் என்பதற்காகத்தான். ஆகையால் உங்கள் குழந்தைகளுக்கு ஒரு வயதுக்கு மேல் மொட்டை அடிக்காமல் இருந்தால் அது சாதாரண நேர்த்திக்கடன் தானே என்று இருந்தால் அந்த என்னத்தை மாற்றி கொண்டு அதில் ஒளிந்து இருக்கும் அறிவியல் உண்மைகளை அறிந்து உங்கள் குழந்தைகளின் வாழ்க்கை சிறக்க வழிவகுதிடுங்கள். நம் முன்னோர்கள் நமக்கு சொல்லிச் சென்ற ஒவ்வொரு விடயத்தையும் நாம் பின்பற்றி அடுத்த தலைமுறைக்கும் நாம் மறவாமல் அதை கற்பிப்போம்.

No comments:

Post a Comment