Sunday 3 February 2019

தங்கத்தை உருவாக்கும் பாக்டிரியா

   தங்கம் என்றாலே சுரங்கம் போன்ற இடங்களில் இருந்து தான் கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான். ஆனால், ஒருவகையான பாக்டிரியாவில் இருந்து கூட தங்கத்தை எடுக்க முடியும் என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர் லிட்சிகின் மாநில பல்கலைகழகத்தின் ஆய்வாளர்கள்.

   கப்ரியவிடாஸ் மெட்டாலி டுரசியன் என்று அழைக்க கூடிய பாக்டிரியா தான் தங்கத்தை கொடுக்கிறது. விஷத்தை தங்கமாக மாற்றும் ஒரு முயற்சி தான் இது. தங்க அயனிகள் தண்ணீரில் கரையும் பொது பாக்டிரியா விஷமாக மாறி விடுகிறது. இதில் இருந்து தன்னை பாதுகாத்து கொள்ள டெல்சின் பாக்டி A என்ற புரதத்தை உருவாக்குகிறது. இது ஒரு கவசமாக செயல்பட்டு பாதிப்பு இல்லாத தங்க துகள்களாக மாற்றி தனது செல்களின் வெளியே குவித்து விடுகிறது.

   இது குறித்த ஆராய்ச்சிக்காக கசன் காசபி மற்றும் ஆடம் ப்ரௌன் என்ற ஆராய்ச்சியாளர்கள் தனி பரிசோதனை கூடத்தை உருவாக்கி இருக்கிறார்கள். காசபி கூறுகையில் கோல்ட் க்ளோரைட் வாங்க பணம் செலவு ஆகும் என்றாலும், ஒன்றுக்கும் உதவாத அதிலிருந்து தங்கத்தை உருவாக்குகிறது இந்த பாக்டிரியா.

    பரிசோதனை கூடத்தில் இந்த பாக்டிரியாவை வைத்துவிட்டு கோல்ட் க்ளோரைட் உள்ளே செலுத்தினால், ஒருவாரத்தில் அது அனைத்தயும் தங்கமாக மாற்றி விடுக்கிறது என கூறுகிறார். இந்த ஆராய்ச்சியை தொடர்ந்து செய்வதினால் பின் வரும் காலங்களில் பாக்டிரியாவைக் கொண்டு தண்ணீரில் கரைந்த தங்கத்தை பிரித்து எடுக்க முடியும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment