Saturday 2 February 2019

கண்களை தானம் செய்யுங்கள்


   தமிழகத்தில் சுமார் 7 லட்சம் பேர் பார்வையின்றி தவித்து வருகின்றனர். மக்களிடம் இருக்கும் தவறான நம்பிக்கையின் காரணமாக பலரும் கண் தானம் செய்ய தயங்குவதால் ஆண்டுக்கு சராசரியாக 6 ஆயிரம் கண்கள் மட்டுமே தானமாக கிடைக்கின்றன. தமிழகத்தில் சாலை மற்றும் ரெயில் விபத்துகளில் சிக்கியும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும், தற்கொலை செய்து கொண்டும். தினமும் பலர் இறகின்றனர். இவ்வாறு ஆண்டுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறக்கின்றனர் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. சென்னையில் மட்டும் ஆண்டுக்கு 60 ஆயிரம் பேர் இறகின்றனர். இவர்களில் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகவே கண்களை தானமாக தருகின்றனர்.

தமிழகத்தில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை, மத்திய மாநில அரசுகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. கண்களை தானம் செய்ய, பொது மக்கள் பலரும் முன்வருவது இல்லை.

தமிழகத்தில் தானமாக கிடைக்கும் அத்தனை கண்களையும் பயன்படுத்த முடிவதும் இல்லை. ஆண்டுக்கு கிட்டத்தட்ட
4 ஆயிரம் கண்களை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. ஒருவர் இறந்த குறிப்பிட்ட நேரத்துக்குள் கண்களை அகற்றினால் தான் அவற்றை பயன்படுத்த முடியும். இறந்தவர்கள் பற்றிய தகல்வகள் தாமதமாக கிடைத்தால் அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்கள் பயன்படாது. அதே போல் முதியவர்களிடம் இருந்து எடுக்கப்படும் கண்களில் செல்கள் குறைவாக இருக்கும் என்கிறார்கள். அந்த கண்களையும் பயன்படுத்த முடியாது. இது போன்ற காரணங்களால் ஆண்டுக்கு 2 ஆயிரம் கண்கள் பயன்படுத்த முடிவது இல்லை.

ஒருவர் உயிரிழந்தவுடன் குடும்பத்தினரும், உறவினர்களும் சோகத்தில் இருப்பார்கள். அந்த நேரத்தில் இறந்தரின் கண்களை உடனடியாக தானம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவது இல்லை. ஒரு சிலர் தான் அதை பற்றி யோசனை செய்கின்றனர். இறந்தவரை ஊனத்தோடு புதைத்தால் அடுத்த பிறவியில் அவர் ஊனத்தோடு பிறப்பார் என்ற மூடநம்பிக்கையும் மக்களிடையே பரவலாக உள்ளது.

உலக அளவில் இலங்கையில் தான் கண் தானம் அதிகம் உள்ளது. இந்தியாவில் கண் தானம் செய்வதில் குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழகத்தில் சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனைக்கு ஆண்டுக்கு சுமார் 1௦௦௦ கண்கள் தானமாக கிடைப்பது குறிபிடத்தக்கது.

தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு இறக்கும் அனைவரும் கண் தானம் செய்து அதை முழுமையாக பயன்படுத்தினால், சுமார் 2 வருடங்களுக்குள் பார்வையில்லாதவர்கள் பட்டியலில் இருந்து நம் தமிழ் நாடு நீக்கப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. முயற்சி செய்வோம் கண்களை தானம் செய்ய.

No comments:

Post a Comment