Friday 31 January 2020

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால் கிடைக்கும் நன்மைகள்


    செம்பு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி வைத்தால், அறையின் வெப்ப நிலையில், 4 மணி நேரத்துக்கு உள்ளேயே தண்ணீரில் உள்ள பாக்டிரியாக்கள் அனைத்தும் செத்து விடுகின்றன. ஸ்டைன்லெஸ் ஸ்டீல் பாத்திரத்தில் வைக்கப்படும் தண்ணீரில் பாக்டிரியாக்கள் 34 நாட்கள் உயிர் வாழ்கின்றன.

    ரத்தத்தில் செம்புக் குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை குறைகிறது. மேலும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடித்தால் இருமல், மற்றும் இரைப்பு நோய் வராது. செம்பு பாத்திரத்தை பயன்படுத்துவதால், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. அதில் பல மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கிறது. அதே பாத்திரத்தை பூஜைக்கு பயன்படுத்தும் போது கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கும் இறை சக்தியை தன்பால் ஈர்த்து நமக்கு தரவல்லது. இதனால் பூஜை என்று வரும் போது செம்பு பாத்திரங்களை மட்டும் பயன்படுத்தினால் மிகவும் சிறந்தது.

     தைராய்டு சுரப்பி சீராக செயல்பட இது முக்கியமானதாக கருதபடுகிறது. பல நேரங்களில், தாமிர குறைபாடு இருக்கையில், தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாகும். செம்பு பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடிப்பதால் உடல்நல பிரச்சனைகளை சமநிலையில் வைத்திடும். தாமிரத்தில் அழற்சி நீக்கும் குணங்கள்  மிகவும் அதிகமாக உள்ளது. கீழ்வாதத்தினால் மூட்டுக்களில் ஏற்படும் வலியை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.

    நம் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க தாமிரம் உதவுகிறது. மேலும் ரத்த சோகையை எதிர்க்க செம்பு மிக முக்கியமான உலோகமாகும். கர்ப்ப காலத்தில் குழந்தையை பாதுகாக்க, நோய் எதிர்ப்பு சக்தி தேவைபடுகிறது. அதனால் கர்ப்ப காலத்தில் தாமிர பானையில் உள்ள தண்ணீரை குடித்தால், தொற்றுக்கள் மற்றும் நோய்வாய்ப்படாமல் பாதுகாப்போடு இருக்கலாம்.

   மேலும் தாமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்சிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. மேலும் இயக்க உறுப்புகளால் உடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்ய இது உதவும். தாமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும். கூடுதல் அளவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான ரத்த ஓட்டம் கிடக்கும்.

No comments:

Post a Comment