Saturday 15 May 2021

கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு காத்திருக்கும் அடுத்த பிரச்சினை

 
     கோவிட்-19 னுடைய கொடிய 2 வது அலை இந்தியாவை பெரிய அளவில் தாக்கி வருகிறது. இந்த நிலையில் கோவிட்-19 ல் இருந்து மீண்ட மற்றும் மீண்டு கொண்டிருக்கும் நோயாளிகளை கருப்பு பூஞ்சை என்று அழைக்கப்படும் ஒரு அறிய வகை நோய் தொற்று பாதிப்பதாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கூறுகின்றனர்.
 
 
 
     மியுகோர் மைக்ரோ சிஸ் என்பது மிகவும் அரிதான தொற்று. மண் தாவரங்கள், மற்றும் உரங்கள், அழுகும் பழங்கள், மற்றும் காய்கறிகளில் பொதுவாக காணப்படும் பூஞ்சையால் இது உருவாகிறது. இது எல்லா இடங்களிலும் இருக்கிறது. மண்ணிலும், காற்றிலும், மற்றும் ஆரோக்கியமான மக்களின் மூக்கு மற்றும் சளியிலும் காணபடுகிறது என்கிறார் டாக்டர் நாயர். இது சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரல்களை பாதிக்கிறது. மேலும் சர்க்கரை நோய், புற்றுநோய் எய்ட்ஸ் போன்ற கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ள நபர்களுக்கு உயிருக்கு கூட ஆபத்தை விளைவிக்க கூடியது. 

     50 சதவீதம் இறப்பு வீகிதத்தை கொண்ட இந்த பூஞ்சை தீவிர கோவிட்-19 நோயாளிகளிடம் அவர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சையான ஸ்டீராய்டுகளின் பயன்பாட்டால் தூண்டப்படலாம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஸ்டீராய்டுகள் கோவிட்-19 நோயாளிகளின் நுரையிரல்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து கொரானா வைரஸை எதிரித்து போராட, உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு அதிக அளவில் செயல்படும்போது ஏற்படக்கூடிய, சில சேதங்களை தடுக்க உதவுகிறது. ஆனால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை குறைத்து டையபெடிஸ் நோயாளிகள் மற்றும் டையபெடிஸ் அல்லாத கோவிட்-19 நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை அதிகரிகின்றன. நோய் எதிர்ப்பு சக்தியின் வீழ்ச்சியே மியுகோர் மைக்ரோ சிஸ் என்ற நிலைக்கு காரணமாக இருக்கலாம் என கருதபடுகிறது. 


      டையபெடிஸ் பிரச்சினை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை குறைகிறது. கொரானா வைரஸ் அதை அதிகரிக்கிறது. மேலும் கோவிட்-19 உடன் போராட உதவும் ஸ்டீராய்டுகள், எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றும் விதமாக செயல்படுகிறது என இது குறித்து டாக்டர் நாயர் விரிவாக விலகுகிறார். கொரோனா இரண்டாம் அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் ஒன்றான மும்பையில் மூன்று வெவ்வேறு மருத்துவமனைகளில் பணி புரியும் டாக்டர் நாயர் ஏப்ரல் மாதத்தில் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட 40 நோயாளிகளை தான் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்களில் பலர் டையபெடிஸ் நோயாளிகளாக இருந்ததாகவும், அவர்கள் வீட்டில் இருந்தே கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை எடுத்து மீண்டவர்கள் என்றும் கூறுகிறார். அவர்களில் 11 பேருக்கு அறுவை சிகிச்சை மூலம் கண் அகற்றப்பட வேண்டி இருந்தது.

     டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில், மும்பை, பெங்களூரு, ஹைதராபாத், டெல்லி மற்றும் புனே ஆகிய 5 நகரங்களில் உள்ள, அவருடன் பணி புரியும் ஆறு மருத்துவர்கள் இத்தகைய தொற்று 58 பேருக்கு பதிவாகியுள்ளதாக கூறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கோவிட்-19 ல் இருந்து மீண்ட 12 முதல் 15 நாட்களுக்குள் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. மும்பையில் பரபரப்பாக செயல்படும் சியோன் மருத்துவமனையில் கடந்த 2 மாதங்களில் 24 பூஞ்சை தொற்று நோயாளிகள் கண்டறியபட்ட்ன. முன்னர் இது ஓர் ஆண்டுக்கு 6 என்ற அளவில் தான் இருந்தது என மருத்துவமனையின் காது, மூக்கு மற்றும் தொண்டை பிரிவின் தலைவர் டாக்டர் ரேணுகா பிராடு தெரிவித்துள்ளார். அவர்களில் 11 பேர் ஒரு கண்ணை இழந்ததாகவும், 6 பேர் உயிரையே இழந்ததாகவும் அவர் கூறுகிறார். 


      அவரது பெரும்பாலனா நோயாளிகள் நடுத்தர வயது சர்க்கரை நோயாளிகள். அவர்கள் கோவிட்-19ல் இருந்து மீண்டு 2 வாரங்களுக்கு பிறகு இந்த பூஞ்சை தோற்றால் பாதிக்கப்பட்டன. இப்போதே இது வாரத்துக்கு 2 அல்லது 3 பேரை பாதிப்பதை நாங்கள் காண்கிறோம். பெருந்தொற்று காலத்தில் இது மேலும் அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் கவலை தெரிவித்துள்ளார். தென்னிந்திய தலைநகரான பெங்களூரில், கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் ரகுராஜ் இதுபோன்ற ஒரு நிகழ்வை கூறுகிறார். கடந்த இரண்டு வாரங்களில் அவர் 19 பேருக்கு இந்த மியுகோர் மைக்ரோ சிஸ் நோய் பாதித்ததை கண்டதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் இளம் நோயாளிகள் என்றும், சிலரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால், அறுவை சிகிச்சை கூட செய்ய முடியவில்லை என்று தெரிவிக்கிறார். கடந்த முதல் அலையில் ஏற்பட்டதை காட்டிலும் தற்போது ஏற்படும் பூஞ்சை தொற்று வீரியம் நிறைந்தாகவும், எண்ணிக்கையில் அதிகம் இருப்பதையும் கண்டு வியப்படைவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். 

     கடந்த இரண்டு ஆண்டுகளில் மும்பையில் 10க்கும் குறைவான தொற்றுகளே பதிவான நிலையில் இந்த ஆண்டு நிலைமையே வேறு என்கிறார். டாக்டர் நாயர். பெங்களூர் டாக்டர் ரகுராஜ், இந்த தொற்று ஆண்டுக்கு 1 அல்லது 2 க்கு மேல் பதிவாகவில்லை என கூறுகிறார். பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பொதுவாக மூக்கடைப்பு மற்றும் மூக்கில் ரத்தம் வழிதல், வீக்கம், கண்ணில் வலி, கண் இமை இரக்கம் போன்ற அறிகுறியுடன் தொடங்கி, பார்வை மங்குதல் முதல் பார்வை இழப்பு வரை வருகிறது. மூக்கை சுற்றி தோளில் கருப்பு திட்டு தோன்றலாம், மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளில் பெரும்பாலனோர் பார்வை இழப்பு துவங்கியவுடன் தான் வருகிறார்கள் எனவும், அந்த தொற்று மூளைக்கு பரவாமல் தடுக்க, கண்களை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் கூறுகிறார்கள். சில சந்தர்பங்களில் நோயாளிகள் இரு கண்களின் பார்வையை இழந்து விடுவதாகவும். 

     சில அறிய சந்தர்பங்களில் நோய் பரவாமல் தடுக்க மருத்துவர்கள் தாடை எலும்பை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டி இருப்பதாகவும் இந்திய மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த நோய்க்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே மருந்து, ஒரு டோஸ் 3,500 ரூபாய். இதை தினமும் 8 வாரங்களுக்கு அன்றாடம் நரம்பில் செலுத்த வேண்டும். இது ஓன்று தான் பூஞ்சை தொற்றுக்கு எதிராக பலன் அளிக்க கூடியதாக் இருக்கும் என கூறுகிறார்கள் மருத்துவர்கள். கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையின் போதும் சிகிச்சைக்கு பிறகும் சரியான அளவில் ஸ்டீராய்டுகள், சரியான காலத்துக்கு வழங்கபடுவதை  உறதி செய்வதே பூஞ்சை தொற்று நோயை தடுப்பது ஒரு வழியாகும் என மும்பையை சேர்ந்த சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் ராகுல் பாக்ஸி கூறுகிறார். 

     கடந்த ஆண்டில் கோவிட்-19 ஆள் பாதிக்கப்பட்ட சுமார் 800 சர்க்கரை நோயாளிகளுக்கு தாம் சிகிச்சை அளித்ததாகும், அவர்களில் எவருக்கும் பூஞ்சை தொற்று ஏற்படவில்லை எனவும் அவர் கூறுகிறார். நோயாளிகள் குணமாகி வீடு திரும்பிய பிறகும் மருத்துவர்கள் சர்க்கரை அளவை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர் பாக்ஸி கூறுகிறார். இது மிகப்பெரிய அளவில் பரவவில்லை என்றாலும், இது தொடர்ந்து நாடு முழுவதும் அதிகரித்து வருவதற்கான காரணம் என்ன என்பதை கூறமுடியவில்லை என ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவிக்கிறார். இது திரிவு வைரஸாக தோன்றுகிறது. ரத்த சர்க்கரை அளவை மிகவும் அதிகரிக்கிறது. மேலும் இதில் மிகவும் அதிகமாக இளம் வயதுடையவர்களை தான் பாதிக்கிறது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment