Sunday 12 June 2022

அரசு அதிரடி உத்தரவு, இனி மூன்று குழந்தைகள் கட்டாயம்

     உலகில் அதிகமான மக்கள் தொகையை கொண்ட சீனா, 1979 ஆம் ஆண்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்த, கடுமையான ஒரு குழந்தை திட்டத்தை அமுல்பத்தியது. அதோடு மட்டும் இல்லாமல் திருமணமான தம்பதிகள் அரசாங்கத்தால் கண்காணிக்கப்பட்டனர். இரண்டாவது குழந்தை கரு தரித்தால் அதனை வலு கட்டாயமாக கலைக்க வலியுறுத்தினர்.

     இரண்டாவது குழந்தையை பெற்று கொண்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனால் கோடி கணக்கான கரு களைப்புகள் அங்கே அரங்கேறியது. இதன் விளைவு சீனாவில் புதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. மறுபுறம் உழைக்கும் இளம் வயதினர் எண்ணிக்கை சரியத் தொடங்கின. இதனால் வரும் காலங்களில் தொழில் துறை வளர்ச்சிக்கு தேவையான மனித சக்தி கிடைக்காத நிலைக்கு தள்ளப்படும் அபாயத்தை சீனா எதிர்கொண்டது.

     இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை சீன அரசு கைவிட்டது. சீன தம்பதிகள் இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்றது. இருப்பினும் மக்கள் தொகையில் வளர்ச்சி காணாத நிலையில் மூன்று குழந்தைகள் பெற்று கொள்ளலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இதற்காக மானியமும் சலுகைகளும், சீன அரசும் மாகாண அரசுகளும் அறிவித்தது. பெற்றுக்கொள்ளும் குழந்தைகளை பராமரிக்க வங்கியில் குறைந்த வட்டியில் கடன் பெற்றுக் கொள்ளாலாம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளும் வெளியாகின.


      ஆனால் இவை அனைத்தும் சீன இளைஞர்களை கவரவில்லை. கொரோனா ஊரடங்கு, பொருளாதார நிலை, கல்வி ஆகியவற்றை கருத்தில் கொண்டு, சீன தம்பதியர்கள் 3 குழந்தைகள் பெற்று கொள்ள முன் வரவில்லை. மறுபுறம் சீன இளைஞர்கள் திருணம் செய்து கொள்ளவும் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. சீன மக்கள் தொகையில் குறிபிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை என்பதை சீனாவின் தேசிய புள்ளி விவர பணியகத்தின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில் மக்கள் தொகையை அதிகரிக்க, விரைவாக திருமணம் செய்து கொள்ளவும். ஒரு தம்பதி குறைந்தது 3 குழந்தைகள் பெற்று கொள்ளவும், அரசு சார்பில் கட்டயபடுத்த தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment