Wednesday 10 August 2022

இந்த வருடங்களுக்கு முன் திருமணம் செய்த பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இல்லையா ?


       1956-ல் இந்து வாரிசு உரிமை சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அந்த சட்டத்தின்படி, குடும்பத்தின் சொத்தில் பெண்களுக்கும் சம பங்கு உண்டு என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த சட்டத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தமும் செய்யப்பட்டது. 

 

      அதன்படி கடந்த 25.03.1989 க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து பெண் தங்கள் பூர்வ சொத்தில் பாக பிரிவினை கேட்க முடியாது. அதற்கு பின்னர் திருமணம் செய்து கொண்ட பெண்கள் தனது தந்தையின் பூர்விக சொத்தில் பாக பிரிவினை கோர உரிமை உண்டு. ஆனால், சொத்து பாகப்பிரிவினை 25.03.1989 க்கு முன்பு செய்யபட்டிருந்தால் அந்த சொத்திலும் உரிமை கோர முடியாது என்று கூறப்பட்டுள்ளது. 

 


      இது தொடர்பாக டெல்லி உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், "இந்து வாரிசு சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்த 2005-ம் ஆண்டுக்கு முன்பு தந்தை உயிர் இழந்து இருந்தால், சம்பந்தப்பட்ட பெண்கள் அந்த சொத்திலும் உரிமை கோர முடியாது" என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

      இதை தொடர்ந்தும் இந்து குடும்பத்தில் பரம்பரை சொத்தில் மகள்களுக்கு சம உரிமை வழங்கிய இந்து வாரிசு திருத்தச் சட்டம் 2005 தொடர்பாக பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 2015 மற்றும் 2018-ல் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது. இதனால் இந்த விவகாரத்தில் சட்ட ரீதியான கேள்விகள் எழுந்தது. 

 

      இதற்கிடையே டெல்லி உச்ச நீதிமன்றம் தீருப்புக்கு எதிராக சுப்ரீம்கோர்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எஸ். அப்துல் நாசர், மற்றும் எம்.ஆர்.ஷா ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு வழங்கப்பட்டது. 

 


      அதன்படி இந்து கூட்டு குடும்ப சொத்தில் மகன்களை போலவே மகள்களுக்கும் சம உரிமை உண்டு என நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பில் நீதிபதிகள் கூறியதாவது. "ஒரு இந்து குடும்பத்தில் அந்த குடும்பத்தின் சொத்தில் மகள்களுக்கான சம உரிமையை யாரும் மறுக்க முடியாது. இந்து கூட்டு குடும்பத்தின் சொத்து பாகப்பிரிவினையில், தந்தை இந்து வாரிசு உரிமை சட்டம் - 2005 திருத்ததிற்கு முன்பு இறந்து இருந்தாலும் அந்த குடும்பத்தின் ஆண் மக்களுக்கு உள்ளதை போலவே பெண் மக்களுக்கும் அந்த சொத்தில் சம உரிமை உண்டு." என்று தீர்ப்பு வழங்கினர்.. 

 

ஏற்கனவே இந்து வாரிசு உரிமை சட்டம் 1956, மகள்களுக்கு வழங்கிய சம உரிமை இன்றும் செல்லும். பெண் மக்களுக்கு சொத்தில் சம உரிமையை மறுக்க முடியாது.

No comments:

Post a Comment