Wednesday 17 June 2015

நோயை விரட்ட கைதட்டுங்கள்


பொது நிகழ்ச்சிகளில் ஒருவரை பாராட்ட கை தட்டுகிறோம். இப்படி கைதட்டி ரசித்து சிரிப்பதன் மூலம் எந்த நோயும் நம்மை அண்டாமல் விரட்டலாம். இந்தியாவில் ஒரு மணி நேரத்தில் 90 பேர் மாரடைப்பு வந்து மரணமடைகிறார்கள். இதய நோய் பாதிப்புக்கு ஆள்வதில் உலகத்திலேயே இந்தியர்களுக்குத்தான் முதலிடம். இந்தியர்களுக்கு நோய் வர உடலியல் காரணங்களை விட உளவியல் காரணங்கள் தான் அதிகம்.

எதற்கும் உணர்ச்சி வசப்படாமல் அனைத்தையும் சாதரணமாக எடுத்துக் கொள்ளும் மனநிலை வந்தாலே நம்மை எந்த நோயும் அணுகாது. வெற்றிதான் மகிழ்ச்சியின் திறவுகோல் எனபதைவிட மகிழ்ச்சியாக இருப்பதே வெற்றிதான் என்று எண்ண வேண்டும். இதற்கு நன்றாக மனம்விட்டு சிரிப்பதும், கைதட்டி ரசிப்பதும் அவசியம்.

கை தட்டுவதால் உடலில் ஒரு வகையான "அக்குபிரஷர் ட்டீட்மென்ட்" ஏற்படுகிறது. மூளையும் பிற உறுப்புகளும் உற்சாகமாய் இயங்குகின்றன. கைகளில் உள்ள நரம்புகள், இதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல் போன்ற உறுப்புகளுடன் தொடர்பு கொண்டவை. இரண்டு கைகளையும் இணைத்து தட்டுவதன் மூலம் நரம்புகள் தூண்டபடுகின்றன. தைவான் நாட்டில் கை தட்டுவதன் மூலம் எலும்பு புற்று நோயினை குணப்படுதியுள்ளனர்.

எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் திபெத், சென்று தலாய்லாமாவை சந்தித்தார். அப்போது தலாய்லாமா, புற்று நோயால் பாதிக்கப்பட்டவரை 2௦ நிமிடங்களுக்கு இரண்டு கைகளையும் சேர்த்து தட்டச் சொன்னாராம். இப்படி தினமும் 3௦ நிமிடங்கள் கை தட்ட பயிற்சி செய்தால் போதும் என்றாராம்.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் புற்று நோய் அவருக்கு முற்றிலுமாக குணமாகிவிட்டது. நம் உடலில் உள்ள ரத்த நாளங்கள் வெறும் 2 மி.மீ. குறுக்களவு கொண்டவை. நாம் டென்ஷன் ஆகும் போது அட்ரினலின், கார்ட்டிசால் ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும். இவை அந்த நாளங்களில்அடைப்பை ஏற்படுத்தும்.

இந்த சுரப்பை கட்டுப்படுத்தும் சக்தி நம் உடலில் இயல்பாகவே இருக்கிறது. சீரான உணவு, முறையான உடற்பயிற்சி, நல்ல பழக்கங்கள், மன மகிழ்ச்சி இவையெல்லாம் எண்டார்பின், மெலட்டோனின், செரட்டோனின் ஹார்மோன்களும் எச்.டி.எல். என்கிற நல்ல கொழுப்புகளும் உருவாகும். இதனால் 99 சதவீத அடைப்பு இருந்தால் கூட தானாக கரைந்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் சொல்கிறார்கள். தினமும் 2௦ நிமிடங்களுக்கு ஜோராய் கை தட்டுங்கள் நோய் வரவே வராது.

காசா...... பணமா...... சும்மா தட்டித்தான் பாருங்களேன்............

No comments:

Post a Comment