Monday 2 November 2015

மலையளவு ஒளிவீசும் வைரங்களின் கதைகள்


இந்தியாவை ஆண்ட அலாவுதீன் கில்ஜியின் சேனாதிபதி மாலிக் கபூரின் தென்னிந்தியப் படையெடுப்பின் பொது கைப்பற்றப்பட்டது ஒரு வைரம். பின்னர் குவாலியர் மன்னர் குடும்ப வசமானது அந்த வைரம். ஹுமாயுன் தலைமையில் பாபர் படைகள் குவாலியரை தாக்கியபோது, குவாலியர் மன்னர் குடும்பத்தினர் தமது உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வைரத்தை விலையாகக் கொடுத்தனர். ஹுமாயுன் தனது தந்தை பாபரிடம் அத வெற்றி பரிசாக அளித்தார். பாபர் அந்த வைரத்தை ஹுமயுனிடமே திருப்பித் தந்துவிட்டார்.

பின்னர், பாரசீக மன்னர் ஷா தாமாஸ்ப் கைக்கு போன அவ்வைரம், தட்சிணப் பீடபூமியை ஆண்ட நிஜாம் ஷாவை வந்தடைந்தது. 17-ம் நூற்றாண்டில் ஷாஜஹான் வசம் வந்தது அந்த வைரம். பின்னர் மொகலாய மன்னர்களிடம் பாதுகாப்பாக இருந்தது. 1739-ல் டெல்லியை சூரையாடிஅய பாரசீக மன்னர் நாதிர் ஷா, மொகலாய மன்னர் முகமது ஷாவிடம் இருந்து அந்த வைரத்தைக் கைபற்றிகொண்டார். 

பிரசித்தி பெற்ற "கோஹினூர்" வைரத்தின் கதை இது. அதற்கு கோஹினூர் ('மலையளவு ஒளிவீச்சு') என்று பெயரிட்டவரும் நாதிர்ஷாதான். தாதிர் ஷாவுக்குப் பின்னர் அவரது வழித்தோன்றல்களிடம் இருந்தது இந்த வைரம். தொடர்ந்து, "பஞ்சாப் சிங்கம்" என்றழைக்கப்பட்ட ரஞ்சித் சிங் கைவசம் மாறியது.

பஞ்சாப் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்குள் வந்தபிறகு, சர் ஜான் லாரன்ஸ் என்ற திகாரி அதை பிரிட்டிஷ் மகாராணி விக்டோரியாவுக்குப் பரிசாக அளித்தார். இன்றுவரை பிரிட்டீஷ் கிரீடத்தை அலங்கரித்து வருகிறது, கோஹினூர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகில் வெட்டி எடுக்கப்பட்டது இந்த புகழ்பெற்ற வைரம்.

No comments:

Post a Comment