Sunday 22 April 2018

அபாயகரமான விஷவாயு


   பாழைடைந்த கிணற்றில் இறங்கும்போதும் மற்றும் பாதாள சாக்கடையில் இறங்கும் போதும் விசவாயு தாக்கி மனிதர்கள் இறந்திருப்பதாக செய்திகள் வருவதை பார்த்திருக்கலாம். இது இயற்கையாக உருவாகும் விஷவாயுதான். ஆனால் இதை செயற்கையாகவும் உருவாக்கியது முதலாம் உலக போரில் தான்.

   முதன் முதலில் விஷவாயுவை உலகிற்கு அறிமுகப்படுத்தியது ஜெர்மனிதான். இரண்டாம் உலகபோரை விட முதலாம் உலகப்போரில் தான் அதிகமான விஷவாயு தாக்குதல் நடைபெற்றது. 13 லட்சம் டன்னுக்கும் அதிகமான விச வாயுக்குகள் முதலாம் உலக போரில் பயன்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் கண்ணிர் புகை மற்றும் மஸ்டர்ட் கேஸ் போன்றவற்றை பயன்படுத்தியது ஜெர்மனி. ஆனால் அது போர் வெற்றியை தரவில்லை. பிறகுதான் ஹெப்பர் என்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் விஷ வாயுவை பரிந்துறை செய்தார். கண் எரிச்சல் உண்டாக்குதல் மூச்சு திணறல் ஏற்படுதல் கொப்பளங்கள் உருவகுதல் உடல் உறுப்புகளை செயல் இலக்க செய்வது. என உடனடியாக மரணத்தை ஏற்படுத்துதல் மற்றும் தவணை முறையில் மரணத்தை கொண்டுவருவதுதான் இந்த விஷ வாயுவின் முதன்மை செயலாகும்.

   முதல் உலகப்போரில் ஹிட்லர் தான் இந்த விஷ வாயுவை அதிகமாக பயன்படுத்தினார். இதன்மூலம் ஹிட்லருக்கு வெற்றிகள் பல கிடைத்தாலும் ஹிட்லருக்கு தற்காலிகமாக செயல் இளந்தது இதனால் இரண்டாம் உலக போரில் விஷவாயுவை பயன்படுத்த தனது படைகளுக்கு தடை விதித்தார்.

   ஆனாலும் யூதர்களை கொத்துக்கொத்தாக கொலை செய்ய ஹிட்லர் பயன்படுத்தியது விஷவாயுவைத்தான். பின்னாளில் விஷ வாயுக்களை பயன்படுத்த தடை விதிக்கபட்டிருந்தாலும் இன்னும் சில இடங்களில் விஷவாயு தாக்குதல்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment