Tuesday 12 January 2021

சர்க்கரை நோய்யை கொல்லும் சர்க்கரை கொல்லி மூலிகை

      இந்த சர்க்கரை கொல்லி மூலிகையின் பயன்கள் என்னவென்றால், வாந்தி உண்டு செய்வதற்கும், நெஞ்சில் உள்ள கோழையை அகற்றி இருமலை கட்டுபடுத்துவதற்கும் உதவுகிறது. மேலும், உணவு குழலின் செயல்திறனைக் கூட்டுவதற்கும் பயன்படுத்தபடுகிறது. இந்த தாவரத்தின் இலை பித்தத்தை பெருக்கி, தும்மளுண்டாக்கும் மேலும், நஞ்சுகளை முறிக்கும் சக்தி கொண்டது. இதன் வேர் காய்ச்சல் போக்கியாகவும் செயல்படுகிறது. அதுமட்டுமல்லாது சதை நரம்பு ஆகியவற்றை சுருங்கவும் வழிவகுக்கிறது..

     இது சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதன் இலையை மெற்று துப்பிவிட்டு, வாயில் சர்க்கரை போட்டால், இனிக்காது மாறாக  வாயில் போட்ட சர்க்கரை மண் போல இருக்கும். 50 கிராம் கொடி இலையுடன், திரிகடுகு (சுக்கு, மிளகு, திப்பிலி) வகைக்கு 10 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு, 200 மி.லி. வீதம் கொடுத்து வர தணியாத தாகத்துடன் உள்ள சுரம் தணியும்.

     கொடி இலையுடன் 10 கிராம் களா இலை 20 கிராம் மையாய் அரைத்துக் காலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வந்தால், தாமதித்து வரும் மாதவிடாய், உதிர சிக்கல், கற்பாயசக் கோளாறு போன்றவை தீரும்.

      இந்த சர்க்கரை கொல்லி மூலிகை ஒரு பங்கும், தென்னம்பூ 2 பங்கும் எடுத்து மையாய் அரைத்து பட்டாணி அளவாய் மாத்திரை செய்து நிழலில் உலர்த்தி காலை, மாலை என ஒரு மாத்திரை வெந்நீரில் விழுங்கி வந்தால், சிறுநீர் சர்க்கரை தீரும், மருந்து சாப்பிடும் வரை நோய் விலகி இருக்கும்.

     இந்த சர்க்கரை கொல்லி மூலிகையின் வேர் சூரணம் ஒரு சிட்டிகையும், திரிகடுகு சூரணம் ஒரு சிட்டிகையும் எடுத்து, வெந்நீரில் இட்டு பருகி வந்தால், கபம் வெளியாகி, ஆஸ்துமா மற்றும் மூச்சுதிணறல் தீரும். 

    இந்த சர்க்கரை கொல்லி மூலிகையின் வேறு பெயர்கள் 1.சிறுகுறிஞ்சான், 2.இராமரின் ஹார்ன், 3.சிறுங்கி.

தாவரத்தின் அறிவியல் பெயர் :  Gymnema Sylrestre, Asclepiadaceae.

வளரும் தன்மை : இது ஒரு கொடிவகைப் பயிர், எதிர் அடுக்கில் அமைந்த இலைகளையும், இலை கோணத்தில் அமைந்த பூங்கொத்துகளையும், உடைய கற்று கொடி. இதனுடைய இளங்கொடி பசுமையாகவும், அதன் மேல் வெளிறிய பசுமையுடன் இலைகளும், மஞ்சள் நிற பூக்களும் இருக்கும். இக்கொடி பசுமை இலை காடுகளிலும், பருவமழை காடுகளிலும் காணப்படும். இது கர்நாடக மாநிலம் தார்வார், மஹாபலேஷ்வர் போன்ற இடங்களில் வெளி பயிராக வளர்க்கப்பட்டு வருகிறது. முதிர்ந்த காயிலிருந்து பஞ்சு பொருந்திய காற்றில் பறக்க கூடிய விதைகளை உடையது. 3 அல்லது 4 மாத நாற்றுகள் அல்லது முற்றிய குச்சிகள் மூலம் பயிர் பெருக்கம் செய்யலாம்.

No comments:

Post a Comment